tamilnadu

img

செவ்வாய் கிரகத்திலிருந்து வந்த ‘சித்தி!’

தி நியூஸ் மினிட் இதழுக்கு விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் தந்த பேட்டியில் சிதறிய முத்துக்கள்:
u    பாஜக முற்போக்கு அரசியலுக்காக பணியாற்றுகிறது. 
u    தான் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி. இதுதான் பாஜகவின் மிகப்பெரிய பலம்.
u    ஒரு சிறு ஊழல் கூட செய்யாத கட்சி பாஜக
u    தேர்தல் பத்திரங்கள் ஊழல் அல்லது மோசடி என சொல்ல 
முடியாது. இந்த பிரச்சனையை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள்
என்பதை பொறுத்தது. 
u    தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஆளுமைகள் இப்பொழுது இல்லை. மிகப்பெரிய இடைவெளி உள்ளது. அந்த இடைவெளியை மோடிதான் நிரப்பியுள்ளார். 
u    தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு மோடி ஏராளமாக செய்துள்ளார்.
u    தமிழ்நாட்டின் முன்னேற்றத்துக்கு மோடி நிறைய நிதி தந்துள்ளார். 
u    இந்தியா முழுதும் 10 ஆண்டு மோடி ஆட்சியில் வளர்ச்சி சாதிக்கப்பட்டுள்ளது. ஆனால்
தமிழ்நாடு பின் தங்கிவிட்டது. மற்ற மாநிலங்களை போல தமிழ்நாடும் முன்னேற வேண்டுமெனில் பாஜகவால்தான் அது சாத்தியம்.
u    இந்தி கற்றுக்கொள்வது நமக்கு அதிகாரத்தை தரும்.
u    விருதுநகரில் பல இடங்களில் இந்தி தெரிந்த பெண்கள் தேவை என அறிவிப்பை பார்க்கிறேன். இந்தி வேலைவாய்ப்புகளை தரும் என்பதை இது நிரூபிக்கிறது. 
u    பாஜக எங்குமே முஸ்லிம்களை துன்புறுத்தியதாக நான் நினைக்கவில்லை.
u    விருதுநகரில் உள்ள முஸ்லிம்கள் பாஜகவுக்கு வாக்களிப்பதாக உறுதி அளித்துள்ளனர். 
u    பாஜக முஸ்லிம் எதிர்ப்பு கட்சி என்பது எதிர்கட்சிகளின் பொய் பிரச்சாரம். சில ஊடகங்களின் பொய் தகவல்கள்.
u    இந்து தன்னை பெருமையாக நினைத்து கொள்வதுதான் இந்துத்துவா! அது மற்றவர்களுக்கு எதிரானது அல்ல!
u    குடியுரிமை சட்டம் பற்றி பேசுபவர்கள் அதனை படிக்காமலேயே விமர்சிக்கின்றனர்.
சித்தி நேரடியாக செவ்வாய் கிரகத்திலிருந்து விருதுநகருக்கு வந்துள்ளார் போலும்! சுயமரியாதை இயக்கத்தில் தனக்கென தனி இடம்பிடித்துள்ள நடிகவேள் எம்.ஆர்.ராதா, 
இப்போது தனது மகளான ராதிகாவின் பேச்சைக் கேட்டால் அவரது வேதனைக்கு அளவே 
இருக்காது!