இரவு நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ் தீனப்பகுதியாக மேற்குக் கரைப் பகுதியில்தான் இந்தத் தாக்குதல் நடந்தது. கொல்லப்பட்ட இரண்டு இளைஞர்களும் அப்பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்தனர். அகதிகள் முகாமிற்குள் புகுந்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் இந்த இருவரும் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
பல்வேறு ஆய்வு நிறுவனங்களின் கணிப்புகளின்படி 2022 ஆம் ஆண்டில் வியட்நாமின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 விழுக்காடாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டில் நுகர்வு வளர்ச்சி, கட்டுமானத் துறையில் மீட்சி, சர்வதேச சுற்றுலா மற்றும் பொருளாதாரத்தை முடுக்கி விட அரசு புழக்கத்தில் விட்ட நிதி ஆகியவையே இந்த வளர்ச்சிக்குக் காரணம் என்று கூறப்படு கிறது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உள்நாட்டுப் பொருளாதாரம் திறந்துவிடப் பட்டுள்ளதால் மேலும் வளர்ச்சி இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஆஸ்திரியத் தலைநகர் வியன்னாவில் அணு ஆயுத நாடுகளுக்கும், ஈரா னுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டிசம்பர் 27, 2021ல் இந்தப் பேச்சுவார்த்தைகள் துவங்கின. 2015 ஆம் ஆண்டு கையெழுத் தான உடன்பாட்டை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வருவதே இந்தப் பேச்சு வார்த்தையின் முக்கிய நோக்கமாகும். இந்தப் பேச்சுவார்த்தையின் நிறைவில், நீண்ட காலத்திற்கு நிலைத்து நிற்கக்கூடிய உடன்பாடு இருக்க வேண்டும் என்று ஈரான் கருத்து தெரிவித்துள்ளது.