tamilnadu

img

அனைத்து நீதிமன்றங்களிலும் ஜூலை 1-ம் தேதிக்குள் சிசிடிவி கேமரா

மதுரை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் ஜூலை 1-ம் தேதிக்குள் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என உயர் நீதிமன்றப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து முதன்மை மாவட்ட நீதிபதிகளுக்கு உயர் நீதிமன்றப் பதிவாளர் (நிர்வாகம்) சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில், “நீதிமன்றத்தில் நீதிபதி அமரும் மேடை, அலுவலக வளாகம் முழுவதும் பதிவாகும் வகையில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். கேமரா பதிவில் நீதிமன்றத்தின் பெயர், தேதி, நேரம் ஆகியன பெரிய எழுத்தில் பதிவாக வேண்டும்.சிசிடிவி கேமரா பொருத்தும் பணியை ஜூலை 1-ம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது தொடர்பாக ஜூலை 8-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;