புதுக்கோட்டை, ஜன.19- குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த குற்ற வாளி யாராக இருந்தாலும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநி லத் தலைவர் பெ.சண்முகம், புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராம மக்களை வியாழக்கிழமை சந்தித்து விசா ரணை மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசு கையில், ‘‘வேங்கைவயல் கிராமத்தில் உள்ள பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சம்பவம் உல கையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. சம்பவம் நடந்து 25 நாட்களுக்கும் மேலா கிறது. ஒரு சின்னஞ்சிறிய கிராமத்தில் நடந்துள்ள சம்பவத்தை காவல்துறையினரால் கண்டு பிடிக்க முடியவில்லை என்பது நம்பத் தகுந்த தாக இல்லை. இந்தக் கொடுமை ஊரின் மத்தி யில் நடந்துள்ளது. வெளியில் இருந்து இதை யாரும் செய்து இருக்க முடியாது. குற்றவாளி யாராக இருந்தாலும் உடனடியாக கண்டு பிடிக்க வேண்டும் என்பதுதான் அப்பகுதியில் உள்ள அனைத்துத்தரப்பு மக்களின் எதிர் பார்ப்பாக உள்ளது.
அனைவருக்கும் நிவாரணம்
மலம் கலந்த தண்ணீரை இங்கு வாழும் பட்டியலின மக்கள் அனைவரும் இரண்டு, மூன்று நாட்களாக குடித்துள்ளனர். ஆனால், மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற குழந்தை களுக்கு மட்டும் நிவாரணம் என்பது ஏற்புடை யது அல்ல. காவல்துறையினரின் முதல் தக வல் அறிக்கையில் உரிய திருத்தம் செய்ய வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி யினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் 2015 விதி 3(1)ஏ-ஐ முதல் தகவல் அறிக்கையில் சேர்க்க வேண்டும். மலம் கலந்த குடிநீரைக் குடித்த 70 பேருக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும். இதற்கு நீதிமன்ற உத்தரவு தேவை யில்லை. மாவட்ட ஆட்சியரே நேரடியாக வழங்கலாம். தீண்டாமைக் கொடுமை தமிழ்நாட்டில் பெரும்பாலான கிராமங்களில் உள்ளது. இந்த சம்பவத்தை முன்னுதாரணமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை மேற் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு விவ சாயிகள் சங்கமும் உறுதுணையாக இருக்கும்’’ என்றார்.
விதொச மாநிலப் பொருளாளர் எஸ்.சங்கர், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா ளர் ஏ.ராமையன், தலைவர் எஸ்.பொன் னுச்சாமி, சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் கே.சண்முகம், சி.அன்புமணவாளன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலை வர் டி.சலோமி, செயலாளர் சி.ஜீவானந்தம், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் உடன் சென்ற னர்.
ஆட்சியரிடம் மனு
பின்னர், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யரைச் சந்தித்து குற்றவாளியை உடனடி யாக கைதுசெய்ய வலியுறுத்தியும், கடந்த நான்கு மாதங்களாக நூறுநாள் வேலைத் திட்டத்தில் வேலை வழங்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதால் அவர் களுக்கு உடனடியாக வேலை வழங்கவும், அப்பகுதியில் நிலவும் பதற்றமான நிலை மைக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் வலியுறுத்தி மனு அளித்தனர்.
மலம் கலந்த தொட்டியை இடிக்க வேண்டும்
முதல்வருக்கு வாலிபர் சங்கம் கடிதம்
சென்னை, ஜன. 19- தலித் மக்கள் பயன்படுத்தி வந்த தண்ணீர் தொட்டியில் சாதிய வன் மத்தோடு மலத்தை கலந்த சம்ப வத்தில் முதல்வர் நேரடியாக தலை யிட்டு குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தி யுள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலை வர் எஸ்.கார்த்திக், வி.சிங்கார வேலன் ஆகியோர் தமிழ்நாடு முத லமைச்சருக்கு கடிதம் ஒன்றை எழுதி யுள்ளனர். அதில், “குடி தண்ணீரில் மலத்தை கலந்த குற்றச் செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பதற்கு காவல்துறை தனது விசாரணையை தொடங்கி 20 நாட்களை கடந்த பிற கும் கூட ஒருவர் கூட கைது செய்யப் படவில்லை. மாறாக வேங்கை வயல் தலித் மக்களையே குற்றவாளி களாக சித்தரிக்க காவல்துறை முயற்சிகளை எடுத்து வருகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது. அரசு கூறியுள்ள விவரங்களின் அடிப்ப டையில் இதுவரை விசாரிக்கப் பட்டுள்ள 85 நபர்களில் 36 பேர் தலித் மக்கள்தான். இது விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை யினருக்கும், அரசு நிர்வாகத்திற் குமே சாதிய மனநிலை இருக்கி றதோ? என்ற சந்தேகத்தை உரு வாக்குகின்றது” எனக் குறிப்பிட்டுள் ளனர்.
நாளை தண்ணீர் தொட்டி இடிப்பு போராட்டம்
இதனிடையே, சங்கத்தின் மாநி லத் தலைவர் எஸ். கார்த்திக் சென் னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது,“ வேங்கை வயல் கிராமத்தில் மலம் கலக்கப்பட்ட தண்ணீர் தொட்டி தீண்டாமையின் அடையாளமாக மாறியுள்ளதால் இன்னமும் இடிக்காமல் இருப்பது மனித மாண்புகளை கொச்சைப் படுத்துகிறது. முதலமைச்சர் தலை யிட்டு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அந்த தொட்டியை இடிக்க முன் வரவேண்டும். ஜன.21 அன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்கள் களத்தில் இறங்கி அந்த தொட்டியை இடிக்கும் போராட் டத்தில் ஈடுபடுவார்கள்” என்றார்.