இடுக்கி, ஜூலை 1- தகவல் தொடர்பு சாதனங்கள் பரவ லாக அனைவருக்கும் கிடைக்காத காலத்தில் மக்கள், உறவினர்களுக் காகவும் நண்பர்களுக்காகவும் கடிதம் எழுதி நலம் விசாரித்துக்கொண்டனர். எழுதப்பட்ட கடிதத்தை சம்பந்தப் பட்டவர்களுக்கு அனுப்பிவைத்து விட்டு பதிலுக்காக ஆவலுடன் காத்திரு ப்பது வழக்கம். ஆனால் இன்றைய கணினி யுகத்தில் நாம் யாரை யாவது நினைவு கூர்ந்தால் உடனே மொபைலை எடுத்து அந்த நபருக்கு போன் அல்லது மெசேஜ் செய்கிறோம். முடிந்தால் மணிக்கணக்கில் பேசு வோம். கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு நகரில் வசிப்பவர் கிருஷ்ணபிரசாத். இவரது சகோதரி, பொறியாளரான கிருஷ்ணப்ரியா. இவர் திருமணமாகி முண்டகா யம் கிராமத்தில் வசிக்கிறார். உலக சகோதரர்கள் தினத்தை முன்னிட்டு ஆண்டு தவறாமல் தன் சகோதரர் பிரசாத்துக்கு கடிதம் எழுது வது கிருஷ்ணப்ரியாவின் வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு வேலைப்பளு காரணமாக சகோதரர் தினமான மே 24 அன்று அவரால் கடிதம் எழுத முடியவில்லை. இதை யடுத்து தனக்கு ஓய்வு கிடைத்த மற்றொரு நாளில் அண்ணனுக்கு கடிதம் எழுதத் துவங்கினார். இதற்காக 15 காகித ரோல்கள் வாங்கியுள்ளார். பிறந்தது முதல் இருவரும் வளர்ந்த, இருவருக்குள்ளும் நிகழ்ந்த சண்டை, செலுத்திய அன்பு என நீண்ட கடிதத்தை, 12 மணி நேரத்தில் அவர் எழுதி முடித்தார். பின்னர் அந்தக் கடித பார்சலை அண்ணன் கிருஷ்ண பிரசாத்துக்கு அனுப்பினார். தங்கை யிடம் இருந்து வந்த பார்சலில், பரிசு தான் இருக்கிறது என கிருஷ்ண பிரசாத் நினைத்தார். ஆனால், அதில் இருந்த கடிதத்தை படிக்க படிக்க அவ ருக்கு இன்ப அதிர்ச்சிஏற்பட்டது. கிருஷ்ணப்ரியா அனுப்பியிருந்த கடிதம் 5.27 கிலோ எடையும், 434 மீட்டர் நீளமும் இருந்தது. இதையடுத்து, மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ‘யுனிவர்சல் ரிக்கார்ட் போரம்’ என்ற நிறுவனத்துக்கு, தங்கை தனக்கு எழுதிய கடிதத்தை அனுப்பி யுள்ளார். இது ‘உலக சாதனை’யாக அறிவிக்கப்படலாம் என்று கூறப்படு கிறது.