இடுக்கி, பிப்.8- கேரளத்தில் இடுக்கி ஒன்றிய நிர்வாகத்தின் அதிகாரத்தை கைவிட்ட தலைவர் ராஜிசந்திரன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்து செயல்பட முடிவுசெய்த தைத் தொடர்ந்து இடது ஜன நாயக முன்னணி அதிகாரத்துக்குவந்துள்ளது. திங்களன்று நடைபெற்ற ஒன்றிய தலைவர் தேர்தலில் எல்டிஎப் வேட்பாளராக போட்டியிட்ட ராஜி சந்திரன் வெற்றி பெற்றுள் ளார். இடுக்கி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 13 இடங்கள் உள்ளன. ஏழு உறுப்பினர்கள் இடது ஜனநாயக முன்னணியை ஆதரித்தனர். யுடிஎப்-இல் காங்கிரஸுக்கு ஐந்து, கேரள காங்கிரசுக்கு இரண்டு, எல்டிஎப்பில் சிபிஎம், கேரள காங்கிரஸுக்கு தலா இரண்டு, சிபிஐ, கேரள காங்கிரஸ் (எம்) தலா ஒரு உறுப்பினர்களைக் கொண்டி ருந்தன. ராஜி சந்திரன் எல்டிஎப்-இல் இணைந்ததை தொடர்ந்து, யூடிஎப் பெரும் பான்மையை இழந்தது.