tamilnadu

img

நடப்பு நிதியாண்டுக்குள் 15 அம்ரித் பாரத் ரயில்களை ஐசிஎஃப் ஆலையில் தயாரிக்க திட்டம்

நடப்பு நிதியாண்டுக்குள் 15 அம்ரித் பாரத் ரயில்களை ஐசிஎஃப் ஆலையில் தயாரிக்க திட்டம்

சென்னை, ஜூலை 8 -  சென்னை ஐசிஎஃப் ஆலையில் இந்த நிதியாண்டுக்குள் 15அம்ரித் பாரத் ரயில்களை தயாரித்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, ஏசி மின்சார ரயில்கள் தயாரிப்பு பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சென்னை ஐசிஎஃப் இணைப்பு பெட்டி தொழிற்சாலையில் பல்வேறு வகைகளில் 73 ஆயிரத்துக்கும் அதிக மான ரயில் பெட்டிகள் தயாரித்து வழங் கப்பட்டுள்ளன. தற்போது வந்தே பாரத் ரயில்கள் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இதுவரை 88 வந்தே பாரத் ரயில்கள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. அனைத்து தரப்பு மக்களும் பய ணிக்கும் வகையில் அம்ரித் பாரத் ரயில் தயாரிக்க முயற்சி எடுக்கப்பட்டது. நீண்ட தூர பயணத்துக்கு பொதுவான வசதிகளுடன் ஏசி அல்லாத அம்ரித் பாரத் ரயில் தயாரிக்க முடிவு செய்ய ப்பட்டது. அதன்படி 2 அம்ரித் பாரத் ரயில்கள் தயாரித்து, கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பரில் ரயில்வே வாரி யத்திடம் ஒப்படைக்கப்பட்டன. 22 பெட்டிகளைக் கொண்ட இந்த ரயிலில், ஏசி அல்லாத இருக்கை வசதி பெட்டிகள், தூங்கும் வசதி கொண்ட பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் தனியாக இன்ஜின்கள் இருபுற மும் பொருத்தப்பட்டுள்ளன. பயணி களுக்கான 20 பெட்டிகளும், சரக்கு எடுத்துச்செல்ல 2 பெட்டிகளும் இணை க்கப்பட்டுள்ளன. தற்போது நாடு முழு வதும் 3 வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தி யில் கிடைத்த வரவேற்பை அடுத்து, 200-க்கும் மேற்பட்ட அம்ரித் பாரத் ரயில் களை தயாரிக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. முதல்கட்டமாக, 50  ரயில்களை தயாரித்து வழங்க நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை ஐசிஎஃப் அதிகாரிகள் தெரிவித்ததாவது, “இந்த ஆண்டு இது வரை 4 அம்ரித் பாரத் ரயில்களை தயா ரித்துள்ளோம். நடப்பு நிதியாண்டுக்குள் 15 ரயில்களை தயாரித்து வழங்க திட்ட மிட்டு இருக்கிறோம். இந்த ரயிலில் அவசர பிரேக்கிங் அமைப்பு உட்பட 12 முக்கிய வசதிகளை மேம்படுத்த நட வடிக்கை எடுக்கப்பட்டது. மேம்படுத் தப்பட்ட இருக்கை மற்றும் படுக்கை  வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி, மொபைல் சார்ஜிங் வசதி, அவசர நிலையில் வெளியே அவசர விளக்கு வசதி உட்பட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு ள்ளன.” சென்னை ஐசிஎஃப் ஆலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு ஜூன் வரை தலா 12 பெட்டி களை கொண்ட 6 ஏசி மின்சார ரயில்கள் தயாரித்து, பல்வேறு ரயில்வே மண்டலங்களுக்கு வழங்கப்பட்டுள் ளன. 2025-26ஆம் நிதியாண்டுக்கு மேலும் 8 ஏசி மின்சார ரயில்களை தயாரித்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஐசி எஃப் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.