ஐசிஎப்-இல் தயாராகும் ஹைட்ரஜன் ரயில் ஏப்ரலில் பயன்பாட்டுக்கு வருகிறது
நாட்டில் முதல் ஹைட்ரஜன் ரயில்களை இந்திய ரயில்வே அறிமுகப்படுத்த உள்ளது. பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற் சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள ஹைட்ர ஜன் ரயில் தயாரிப்பு பணிகள் 80 விழுக் காடு நிறைவடைந்துள்ளது. அடுத்த மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்தியாவில் மொத்தம் 19 ரயில்வே மண்டலங்கள் உள்ளது. இங்கிருந்து 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகிறது. நாள்தோறும் 2 கோடிக் கும் மேற்பட்ட மக்கள் ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். பயணிகளின் எதிர்பார்ப்பு மற்றும் தேவைகளை கருத்தில் கொண்டு கூடுதல் ரயில்களும் இயக்கப் பட்டு வருகிறது. இதேபோல, மேம்படுத்தப் பட்ட தொழில்நுட்பத்துடன் அம்ரித் பாரத், வந்தே பாரத் ஆகிய ரயில்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், உலக நாடுகளுக்கு இணையாக ரயில்வே துறையை மேம்படுத்தும் வகையில் ஹைட்ரஜன் ரயிலை உற்பத்தி செய்ய மத்திய ரயில்வே வாரியம் திட்டமிட்டது. அதன்படி, கடந்த ஆண்டு ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் ஹைட்ரஜன் ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப் பட்டது. மொத்தம் 35 ஹைட்ரஜன் ரயில்கள் தயாரிக்க முடிவு செய்யப்பட்டு அதற்காக ரூ.2 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கப்பட்டது. சென்னை பெரம்பூரில் உள்ள ஒருங்கி ணைந்த ரயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்) ஹைட்ரஜன் ரயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கி யது. தற்போது ஹைட்ரஜன் ரயில் தயாரிப்பு பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வர்ணம்பூசுவது, ஹைட்ரஜன் சிலிண்டர் கள் இணைப்பு மற்றும் தொழில்நுட்ப பணி கள் மட்டுமே நடந்து வருகிறது. விரைவில் இப்பணிகள் முடிவடைய உள்ளது. இந்த மாத இறுதிக்குள் பணிகள் முடிவடைந்து அடுத்த மாதம் சோதனை ஓட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட இருக்கிறது. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயி லானது அரியானா மாநிலத்தில் உள்ள ஜிந்த்-சோனிபட் இடையே 89 கிலோ மீட்டர் தூரத்திற்கு இயக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தில்தான் அடுத்த மாதம் சோதனை ஓட்டமும் நடைபெறுகிறது. ரயிலில் 1,200 எச்.பி. திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்த ரயில் பொது மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:- பெரம்பூர் ஐ.சி.எப். தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டுள்ள ஹைட்ரஜன் ரெயில் உலகில் அதிக திறன் கொண்ட ரெயிலாகும். மற்ற நாடுகளில் அதிகபட்சம் 5 பெட்டிகள் வரை இருக்கும். ஆனால், முதன்முறை யாக இந்தியாவில் 10 பெட்டிகள் கொண்ட ஹைட்ரஜன் ரயில் சேவை இயக்கப்பட இருக்கிறது. ஒவ்வொரு ரயிலும் ரூ.80 கோடி செல வில் தயாரிக்கப்படும். கார்பன் உமிழ்வால் இயற்கை மாசடைவதை தடுக்கும் வகையில் மலைப் பகுதிகளில் ஹைட்ரஜன் ரயில் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில்தான் முதல் ரயில் வடக்கு ரயில்வேயில் இயக்கப்பட உள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வேயில் கார்பன் உமிழ்வுவை பூஜ்ஜியமாக மாற்றும் முயற்சி யில் இந்த ஹைட்ரஜன் ரயில் முன்னோடி யாக இருக்கும் என்று கூறினர்.