tamilnadu

img

நூற்றுக்கணக்கான பெண்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

நூற்றுக்கணக்கான பெண்கள் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

தஞ்சாவூர் மாவட்டத்தில் நூறு நாள் வேலை திட்டப் பணிகள் நிறுத்தப் பட்டதால், பணிகளை மீண்டும் துவங்க வேண்டும் என்றும், 4 மாதமாக நிலுவை யில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வா யன்று நூற்றுக்கணக்கான பெண்கள், மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி தலைமையில் மனு அளித்தனர். நாடு முழுவதும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தை ஒன்றிய அரசு செயல் படுத்தி வருகிறது. வாரத்திற்கு ஆறு நாட்கள் என சுழற்சி முறையில் 100 நாள் பணியாளர்களுக்கு வேலை வழங்கப்படுகின்றன. ஆனால் கடந்த 12 வாரங்களுக்குரிய கூலி தொகை இன்னமும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் நூறு நாள் வேலை திட்டப் பணிகள் பல்வேறு பகுதி களில் நிறுத்தப்பட்டுவிட்டதால், ஏற்கெனவே தேர்வு செய்த குளம் வெட்டும் பணி, மேய்க்கால் நிலம் மேம்பாடு பணி உள்ளிட்ட பல விதமான பணிகள் செய்வதற்கு, 100 நாள் பணியாளர்கள் வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

இதனால் நூறு நாள் வேலைத் திட்ட பணியாளர்கள் சம்பளமும், வேலையும் இல்லாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக பூதலூர் ஒன்றியத்தில் வேலை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மீண்டும் வேலை வழங்க வேண்டும். நான்கு மாத சம்பளத்தை வழங்க வேண்டும் என திங்கள்கிழமை அன்று நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், சிபிஎம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், வி.தொ.ச, மாதர் சங்க நிர்வாகிகள், ஆட்சியர் பிரியங்கா பங்கஜத்திடம் தனித் தனியாக மனு அளித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண் ணன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் தமிழரசன், வி.தொ.ச ஒன்றியத் தலைவர் காமராஜ், ராம ஜெயம், தங்கமணி, தமிழ்செல்வன், கரிகாலன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் மனு அளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளித்தார்.

வழக்கு தொடருவோம் மனு அளித்த பின்பு மாதர் சங்க மாநிலச் செயலாளர் எஸ்.தமிழ்செல்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், “பூதலூர் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் நூறு நாட்கள் வேலை திட்டம் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால், நடப்பட்ட மரக்கன்று களுக்கு நீர் பாய்ச்சும் பணி, வட கிழக்கு பருவ மழைக்கு பின் செய்து  கொள்ளலாம் என, ஒதுக்கி வைக்கப் பட்ட குளம் மேம்பாடு பணி முடங்கும் அபாயம் உள்ளது. இதுகுறித்து ஆட்சியரிடம் மனு அளித்துள்ளோம். நூறு நாள் வேலை திட்டம் சம்பளம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு போட உள்ளோம்” இவ்வாறு அவர் கூறினார்.