tamilnadu

img

கொட்டுக்காளி - வரத.இராஜமாணிக்கம், பழனி

மனித வாழ்க்கை இசைக் கருவி சத்தங்களுடன் எப்பொழுதும்  இருப்பது இல்லை. பாடல்கள் இல்லாமல் படம் பார்த்திருக்கிறேன். பின்னனி இசை இல்லாத முதல் தமிழ் படத்தை இப்பொழுது தான் பார்க்கிறேன். கொலை வெறிச் சத்தங்களும் குலை நடுங்கும் சம்பவங்களும் இல்லாமல் நம்மைச் சுற்றிய வாழ்க்கையாக ஒரு படம் இயல்பாக பயணிக்கிறது. 

கதாபாத்திரங்களுடன் சேர்ந்து ஒரு சேவல்  என்னமாய் நடிக்கிறது, அதைவிட ஒரு ஆட்டோ  படம் முழுவதும் கதையை அழகாக சுமந்து  செல்கிறது. பேய் ஓட்டுவதற்காகத் தான் அந்தப் பெண்ணை அழைத்துச் செல்கிறார்கள். ஆனால் அந்தப் பெண்ணைத் தவிர அனை வருக்கும் பேய் பிடித்திருக்கிறது. அது சாதி ஆண வப்பேய், அறியாமைப் பேய், ஆதிக்கப்பேய், பெண் அடிமைத்தனப் பேய் என போய்க்கொண்டே இருக்கிறது. அந்தப் பெண் படம் முழுக்க கண்ணால் பேசு கிறாள். மந்திரிப்பதற்காக வாங்கிய சேவல் கால்  கட்டை அவிழ்த்துக் கொண்டு சுதந்திரமாக வீட்டை விட்டு வெளியேற முனைகிறது. அதன் விடுதலையை எதிர்பார்த்த  அந்தப் பெண்ணின் கண்களில் இறுக்கம் தளர்ந்து  பரபரப்பு தெரிகிறது. இரண்டு பேர் சேர்ந்து கைக்கு சிக்காமல் தப்பிக்க நினைக்கும் சேவலை கஷ்டப்பட்டு மடக்கி மீண்டும் கயிற்றில் கட்டுகின்றனர். அந்தப் பெண் ஏமாற்றம் அடைகிறாள். அவளுக்கான சுதந்திரம் அந்த சேவலைப் போலவே மறுக்கப்பட்டு உள்ளது.  ஆட்டோ பயணத்தில் அந்தப் பெண் முன் இருக்கையிலும் அதே பெண்  சேவலாக பின் இருக்கையிலும் உட்கார்ந்து இருக்கிறாள். கடைசி முயற்சி யாக சேவலை அந்தப் பெண்ணுக்காக பலியிட இருக்கிறார்கள். பலி  கொடுத்தும் அவள் மாறவில்லை என்றால் அவளையும் அந்த சேவலைப்  போல பலி கொடுக்க அவர்கள் தயாராக உள்ளனர். போகும் வழியில் மறிக்கும்  ஒரு முரட்டுக் காளையை மூக்கணாங்கயிர் பிடித்து ஒதுக்க தைரியம் இல்லாத  அவர்கள் ஒரு சிறுமி அன்போடு அந்தக் காளையை அழைத்துச் செல்வதை  சொரணையற்று பார்க்கிறார்கள். சிறுமியின் கைகளில் மிருகம் குழந்தை யாக மாறுவதை உணர மறுக்கிறார்கள்.

ஒரு மாதிரி பதட்டத்துடனே வரும் மாமன் மகன் அந்தப் பெண் உள்ளம்  உருக குலதெய்வத்தை வேண்டுவதையும் அவள் ஒலிபெருக்கியில் பாடும்  பாடலை திரும்ப பாடுவதையும் பார்த்து அவள் தன் காதலனை நினைத்துத்  தான் இப்படி செய்கிறாள் என அவன் அவளை அடித்து துவைப்பதும் அவள்  அதை பொருட்படுத்தாமல் கலைந்த முடியை ஒதுக்கி அமைதியாவதில் அவனைக் கருணையின்றி  தோற்கடிக்கிறாள்.பிறகு நிதானமாக திரும்பி யாரும் அறியாமல் சிறுவனைப் பார்த்து அழகாக  புன்னகைக்கிறாள். அவ னும் சிரிக்கிறான். இவர்களைத் தவிர படத்தில் வேறு யாரும் சிரித்ததாக  தெரியவில்லை.  ஒன்றரை மணி நேரப்படம். ஆணவக் கொலையை நோக்கி பய்யப் பய்ய நகர்கிறது. எல்லோருக்கும் தெரிந்த இருக்கிறது அவளுக்கு பேய் பிடிக்க வில்லை என. ஆனால் சாதி மறுப்பு  காதலினால் அவள் கொல்லப்படு வதை விட பேய் பிடித்ததால் செத்து விட்டாள் என கதை கட்டி விடுவது  ஆதிக்க சாதியினரின் கௌரவத்திற்கு அழகு தானே! இது தமிழ்பட உலகில் ஒரு பரிசோதனை முயற்சி. படத்தை முடிக்கா மல் படம் பார்ப்பவர்களை தொடர்ந்து பயணிக்கச் சொல்வது நேர்த்தியான  உத்தி. படம் தயாரித்த நடிகர் சிவகார்த்திகேயனையும் இயக்குனர் வினோத்  ராஜனையும் மனதார பாராட்ட வேண்டும்.