மனிதச் செயல்கள் பூமியை காலநிலை மாற்றம் என்ற நிலையில் இருந்து கால நிலைச் சீரழிவு என்ற நிலைக்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கி றது. இந்நிலையில் காலநிலை பாதிப்பால் பகல் பொழுதுகள் நீண்டுபோகின்றன என்னும் மற்றொரு அதிர்ச்சி தரும் மாறு தலை ஆய்வாளர்கள் கண்டுபிடித் துள்ளனர். உயரும் புவி வெப்பத் தால் துருவப்பகுதிகளில் பனிப் பாறைகள் பெருமளவு உருகு கிறது. இது புவிக்கோளின் வடி வமைப்பையே மாற்றுகிறது. இந்நிகழ்வு பல கோடிக்க ணக்கான ஆண்டுகளாக சமநிலை சூழலில் இயங்கிவரும் இயற்கை செயல்முறைகளை மனித நட வடிக்கைகள் முன்பு எப்போதும் இல்லாத வகையில் மாற்றுகிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. மில்லி விநாடிகள் அளவே இப் போது இந்த மாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. என்றாலும் இந்த சிறிய மாற்றம் கூட துல்லியமான நேரக் கணக் கீட்டை அடிப்படையாக கொண்டு நடைபெறும் இணையதள போக்கு வரத்து, நிதி பரிவர்த்தனை, உல களாவிய வழியறிதல் போன்ற தொழில்நுட்பத்தை இடையூறு செய்யும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தடிமனாகும் பூமி
நிலவின் ஈர்ப்பு விசையால் பூமி யின் கடல் மற்றும் நிலப்பகுதிகள் ஈர்க்கப்படுவதால் புவியின் பகல் பொழுது அதன் புவியியல் நேரத்து டன் ஒப்பிடும்போது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கி றது. என்றாலும் கிரீன்லாந்து மற் றும் அண்டார்டிகாவின் பனிப்பட லங்கள் உருகுவதால் உலகக் கடல்களில் சேமிக்கப்படும் நீரின் உயரம் அதிகமாகிறது. இதனால் பூமத்தியரேகைக்கு அருகில் இருக்கும் பகுதிகளில் நீர் அதிக அளவில் சேர்க்கப்படுகிறது. இது பூமியை தடிமனாக்குகிறது. இதனால் புவியின் சுழலும் வேகம் குறைகிறது. இது ஏற்கனவே நீளும் பகல் பொழுதின் நேரத்தை மேலும் அதிகமாக்குகிறது. சூழ லுக்கு எதிரான மனிதனின் செயல் களால் நீர் மறு விநியோகம் செய் யப்படுகிறது. இதனால் மைய அச்சை சுற்றிச் சுழலும் பூமி அதன் வட மற்றும் தென் துருவங்களை நோக்கி நகர்கிறது என்று சமீபத்திய ஆய்வு நிரூபித்துள்ளது. மனிதகுலத்தின் கார்பன் உமிழ்வு வளி மண்டலத்தில் ஸ்ட்ரே டோஸ்பியர் (stratosphere) அடுக்கை சுருங்கச்செய்கிறது என்று மற்றொரு ஆய்வு கூறுகிறது. உள்ளூரில் ஏற்படும் வெப்ப நிலை உயர்வு போல அல்லாமல் பூமியின் இயக்கத்தில் மனிதன் உருவாக்கும் தாக்கம் ஒட்டு மொத்த பூமியிலும் உணரப்படுகிறது.
சுழலும் வேகம் குறைவதால்
இந்த மாற்றம் விண்வெளியில் பூமியின் நகர்வையும் சுழற்சியை யும் அடிப்படையாக மாற்றுகிறது. இயற்கை பூமியை ஆளும் செயல் முறை பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக இயல்பாக இருந்து வந்தது. ஆனால் கார்பன் உமிழ்வால் கடந்த நூறு இருநூறு ஆண்டுகளில் நாம் பூமிக்கு இந்த அநீதியை இழைக்கிறோம். மனித நேரக்கணக்கீடு மிகத் துல்லியமான அணுக் கடிகாரத்தை அடிப்படையாகக் கொண்டது. என்றாலும் ஒரு பகல் பொழு தில் நேரம் அல்லது பூமியின் ஒரு சுழற்சி, நிலவின் அலைகள், கால நிலை தாக்கம், கடந்த பனி யுகத்தில் உருவான பனிப்படலங்கள் மீண்டும் மெதுவாக மறுகட்ட மைக்கப்பட்டது போன்ற வேறு பல காரணங்களால் மாறுபடுகிறது. இவை பற்றியும் ஆராயப்பட்டது. இணையத்தொடர்பின் மூலம் செயல்படும் அனைத்து வகை யான தரவு மையங்கள், தகவல் தொடர்பு மற்றும் நிதி பரிவர்த் தனை, வழியறிதல் குறிப்பாக செயற்கைக்கோள்கள், விண் கலன்களின் இயக்கம் போன்றவை துல்லிய நேரத்தை அளவிடுவதன் மூலமே செயல்படுகிறது” என்று ஸ்விட்சர்லாந்து ஜூரிச் இ டி ஹெச் (ETH) ஆய்வு அமைப்பின் பேராசிரியர் பெனடிக்ட் சோஜர் (Prof Benedikt Soja) கூறுகிறார். இந்த ஆய்வுக்கட்டுரை யு எஸ்ஏ அறிவியலுக்கான தேசிய அகா டமியின் முன்னேற்றங்கள் (Procee dings of the National Academy of Sciences of the USA) என்ற இதழில் வெளிவந்துள்ளது. உற்று நோக்கல்கள் மற்றும் கணினி மறு நிர்மானம் செய்து ஒரு நாளின் நீளத்தில் பனி உருகுதல் ஏற்படுத் தும் தாக்கத்தால் பகல் பொழுதின் நீளத்தில் ஏற்படும் மாற்றம் பற்றி மதிப்பிடப்பட்டது.
1900-2000 காலத்தில் பூமியின் சுழலும் வேகம் 0.3 முதல் 1.0 மில்லி விநாடி/நூறாண்டு ((ms/cy)) என்ற அளவில் குறைந்தது. ஆனால் 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு உருகுதல் அதிகமானதால் சுழலும் வேகத் தில் ஏற்பட்ட மாற்றம் இப்போது 1.3 மில்லி விநாடி/நூறாண்டு என்ற விகிதத்தில் உள்ளது. கடந்த சில ஆயிரம் ஆண்டுகளை விட இந்த மாற்றம் கூடுதலானது. பூமியின் வருங்காலம் மனித னின் கையில் வரும் சில பத்தா ண்டுகளில் உமிழப்படும் பசுமைக் குடில் வாயுக்களின் அளவு தீவிர மாக குறைக்கப்பட்டாலும் இந்த மாற்றம் சுமார் 1.0 என்ற அளவில் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள் ளது. உமிழ்வு கட்டுப்படுத்தப்பட வில்லை என்றால் பூமி சுழலும் வேகம் 2100ல் 2.6 மில்லி விநாடி/நூறாண்டு என்ற அளவில் இருக்கும். நிலவின் அலைகளால் உருவாகும் தாக்கம் என்ற ஒற்றை காரணத்தை கடந்து இது பகல் பொழுதின் நீளத்தில் வேறுபாடு களை ஏற்படுத்தும். “கவலை தரும் வகையில் கிரீன்லாந்து மற்றும் அண்டார்டிகா வில் பனிப்படலங்கள் உருகு வதற்கும் பூமியின் பகல் பொழு தின் நீளத்திற்கும் இடையில் நேரடி யான தொடர்பு உள்ளதை இது நிரூபிக்கிறது. பகல் பொழுதில் ஏற்படும் இந்த மாறுதல்கள் நேரத்தை மதிப்பிடு வதில் மட்டும் இல்லாமல் நாகரிக மனித வாழ்வை ஆட்சி செய்யும் வழியறிதல் போன்ற பல தொழில் நுட்பங்களையும் பாதிக்கிறது” என்று ஸ்பெயின் அலிகாண்ட்டே (Alicante) பல்கலைக்கழக ஆய்வாளர் டாக்டர் சாண்டியாகோ பெல்டா (Dr Santiago Belda) கூறுகிறார். இந்த கண்டுபிடிப்பு மனித வாழ்வில் மட்டும் இல்லாமல் எல்லா உயிரினங்களின் வாழ்வி லும் பெரும் தாக்கத்தை ஏற்படுத் தும் என்று ஆய்வாளர்கள் கூறு கின்றனர்.