நாடாளுமன்றத்தில் அரசியல் சாசன சிற்பி டாக்டர்.பி.ஆர்.அம் பேத்கரை சிறுமைப்படுத்திய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா வுக்கு சவாலாக குமளியில் பிரம்மாண்டமான படத்தை வரைந்தார் ஓவியர் கே.ஏ.அப்துல் ரசாக். நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ஆற்றிய உரையில் அம்பேத்கரை அவமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அம்பேத்கர் மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையிலும் வீட்டின் மொட்டை மாடியில் ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமான அம்பேத்கர் படத்தை வரைந்துள்ளார் . சன் பேக் ஷீட்டில் கருப்பு பெயிண்ட் பயன்படுத்தி படம் வரைய இரண்டு நாட்கள் ஆனது. படமும் பெயரும் வீட்டின் கூரையின் மேலும் பக்கவாட்டி லும் எழுதப்பட்டுள்ளன. ஹெலிகாம் மூலம் எடுக்கப்பட்ட காட்சிகள் வெளி யானதும், அம்பேத்கர் படத்தைப் பார்க்க ஏராளமானோர் வீட்டுக்கு வந்த னர். அப்துல் ரசாக் நான்காவது முறையாக பிரம்மாண்டமான படத்தை வரைந்துள்ளார். லெனினின் 100 ஆவது ஆண்டு நினைவு நாளில், 3200 சதுர அடி ஓவியம் அவரால் தீட்டப்பட்டது. மகாத்மா காந்தியின் உயிர்த் தியாகம் 2800 சதுர அடியில் தீட்டப்பட்டது. அப்துல் ரசாக் கடந்த 1,250 நாட்க ளாக ஆன்லைனில் கண்காட்சி நடத்தி வருகிறார். ஏற்கனவே 13,000க்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்துள்ளார்.