கம்யூனிஸ்ட் இயக்கத்தின் காலப்பெட்டகம் எழுத்தாளர் என்.ராமகிருஷ்ணன் படம் திறப்பு, குடும்ப பாதுகாப்பு நிதி வழங்கும் நிகழ்வு மதுரை தீக்கதிர் வளாகத்தில் வியாழனன்று மாலை நடைபெற்றது. அவரது உருவப்படத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஏ.பெருமாள் திறந்து வைத்தார். மதுக்கூர் இராமலிங்கம், சு.வெங்கடேசன் எம்.பி., ஏ.லாசர், இரா.விஜயராஜன், மா.கணேசன், கே.ராஜேந்திரன், சி.ராமகிருஷ்ணன், வி.பரமேசுவரன் மற்றும் குடும்பத்தினர் உள்ளிட்ட தலைவர்கள் செவ்வணக்கம் செலுத்தினர்.