tamilnadu

img

பணிக்கு வந்தது 70 சதவிகிதம் ஊழியர்கள்; கேரளத்தில் 2 லட்சம் கோப்புகளுக்கு தீர்வு

திருவனந்தபுரம், ஜுலை 4- ஒரே ஒரு ஞாயிறு விடுமுறையில் இரண்டு லட்சம் கோப்புகளுக்கு தீர்வு  கண்டு கேரள அரசு வரலாறு படைத் துள்ளது. ‘கோப்பு தீர்வு’ இயக்கத் தின் ஒரு பகுதியாக ஞாயிறன்று (ஜுலை 4) கேரளம் முழுவதும் 5,000 அலுவலகங்கள் திறக்கப்பட்டன. 70 சத விகிதம் ஊழியர்கள் பணிக்குவந்தனர். இந்த நாளுக்கு பதிலாக மற்றொரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். இதனையொட்டி கையும் மெய்யும் மறந்து ‘கோப்பு தீர்வு’ இயக்கத்தில் ஊழியர்கள் வேலை செய்தனர். தலைமைச் செய லகத்திற்கு மட்டும் 2571 ஊழியர்கள் வந்துள்ளனர். முதல்வர் மற்றும் அமைச்சர்கள் அலுவலகங்களும் செயல்பட்டன. ஊராட்சி மற்றும் நக ராட்சி அலுவலகங்களில் 34,995 கோப்புகள் தீர்வு காணப்பட்டன. 941 பஞ்சாயத்துகள், 87 நகராட்சிகள் மற்றும் ஆறு மாநகராட்சிகள் செயல்பட்டு கோப்புகளுக்கு தீர்வு கண்டன. வருவாய்த்துறையில் தேங்கிய 57,751 கோப்புகள் அகற்றப் பட்டுள்ளன.

நில வருவாய் கோட்டாட்சியர் அலு வலகம், ஆட்சியர் அலுவலகம், தாலுகா, கிராமம், சர்வே மற்றும் நில  வாரிய அலுவலகங்களும் செயல் பட்டன. சுகாதாரத் துறை மற்றும் மருத்துவக் கல்வித் துறையில் 1933  கோப்புகளும், சுகாதார இயக்குநர கத்தில் மட்டும் 1371 கோப்புகளும் அகற்றப்பட்டுள்ளன. காவல்துறை தலைமையகத்தில் 80 சதவிகிதம் அதிகாரிகளும் வந்திருந்தனர். 1939 கோப்புகள் அப்புறப்படுத்தப்பட்டன. துறைத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வந்தனர். காசர்கோடு ஆட்சியர் அலு வலகத்தில் உள்ள எண்டோசல்பான் அறையில் இருந்த 325 கோப்புகளுக்கு தீர்வு காணப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவி வழங்க கிராம அலுவலகம் மற்றும் அக்ஷய கேந்திரா  செயல்பட்டன. விடுமுறை என்பதால்  ஊழியர்கள் சிலர் குழந்தைகளுடன் வந்தனர். கோவிட் நெருக்கடி காரண மாக தாமதமான நடவடிக்கையை ஈடு செய்ய ஜூன் 15 முதல் செப்டம்பர் 30 வரை இந்த இயக்கம் நடத்தப் படும். கோப்பு தீர்வு இயக்கத்தை பெரிய அளவில் மேற்கொண்ட ஊழி யர்கள் மற்றும் உயர் அதிகாரி களை முதல்வர் பினராயி விஜயன்  பாராட்டினார். மக்கள் தொடர்பான நிலுவையில் உள்ள பல கோப்பு களுக்கு தீர்வு காணப்பட்டுள்ள தாகவும் முதல்வர் கூறினார்.