அறந்தாங்கி, மே 26- புதுக்கோட்டை மாவட்டம் மண மேல்குடி ஒன்றியம் கட்டுமாவடியில் தொடர்ந்து 34 ஆண்டுகளாக இந்து- முஸ்லிம் இணைந்து நடத்தும் திரு விழா நடைபெற்றது. கட்டுமாவடி சேகரம், ஏனாதி கிரா மத்தில் முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. கோவிலுக்கு அரு கில் சேகு இஸ்மாயில் ஒலியுல்லா தர்கா அமைந்துள்ளது. கோவிலில் காப்பு கட்டுவதற்கு முன்பு சேகு இஸ் மாயில் ஒலியுல்லா தர்காவில் இந்து - முஸ்லிம் இணைந்து பாத்தியா ஓதி, நார்சா வழங்கி, அங்கிருந்து புறப் பட்டு கோவிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவிற்கு முதல் நாள் தர்கா வில் அன்னதான நிகழ்ச்சியும், திரு விழா நாளில் சிறப்பு அபிஷேக ஆரா தனைகளுடன் பால் காவடி, பற வைக் காவடி, செடல் காவடி மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இரவில் மதுபாலி எடுத்தல் நடைபெற்றது. இந்த திருவிழாவில் சுற்று வட் டார கிராம மக்கள், கட்டுமாவடி முஸ்லிம் ஜமாத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 34 ஆண்டுகளாக இந்து - முஸ்லிம் நடத் தும் இந்தத் திருவிழா சமூக நல்லி ணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக திகழ் கிறது.