tamilnadu

img

13 லட்சம் மாணவர்களுக்கு உயர் தரத்தில் திறன் பயிற்சி

சென்னை, ஆக.7- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் முதல் ஆண்டு 13லட்சம் மாணவர்களுக்கு உலகத் தரத்தில் திறன் பயிற்சி அளிக்கப் பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  சென்னை, நேரு உள்விளை யாட்டரங்கில் திங்களன்று (ஆக,7)  நடை பெற்ற  “நான் முதல்வன்” திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், “புதிய நிறுவனங்கள் தொடங்கினாலும், அதில் வேலை செய்வதற்கு திறமையான இளைஞர்கள் கிடைக்கிறது கஷ்டமாக இருக்கிறது” என்று தொழிலதிபர்கள் சிலர் என்னிடம் குறிப்பிட்டுச் சொன்னார்கள். அதை கவனத்தில் வைத்து, உருவான திட்டம்தான், இந்த 'நான் முதல்வன்' திட்டம்.  ஆண்டுக்கு, “10 லட்சம் பேருக்கு திறன் பயிற்சி” என்று தான் முதலில் இலக்கு  நிர்ணயித்தோம். முதல் வருடத்திலேயே, 13 லட்சம் மாணவர்களுக்கு, உயர் தரத்தில் திறன் பயிற்சி வழங்கப்பட்டிருக்கிறது. இதுதான் இந்தத் திட்டத்தினுடைய மிகப்பெரிய சாதனை. இப்படி பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு மிகச்சிறந்த வேலைவாய்ப்புகள் கிடைத்திருக்கிறது என்பது, அடுத்த சாதனை. பள்ளிப் படிப்புக்குப் பிறகு மாண வர்களின் உயர் கல்விக்கு வழிகாட்ட மாவட்டந்தோறும் “கல்லூரிக் கனவு” என்ற திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. இதன் மூலமாக, 75 ஆயிரம் மாண வர்கள் பயனடைந்திருக்கிறார்கள். மாண வர்களுடைய  உயர்கல்வியை ஊக்கு விக்க, “உயர்வுக்குப் படி” என்ற திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. இதில் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்திருக்கிறார்கள். 

ஒரே ஒரு திட்டம் தமிழ்நாட்டு மாணவ சமுதாயத்தில் எப்படிப்பட்ட அறிவுப் புரட்சியை உருவாக்கி வருகிறது என்பதற்கான எடுத்துக்காட்டுகள் இவை கள் எல்லாம்! தொழிற்கல்விக்கு அடித்தளமாக விளங்குகிற பாலிடெக்னிக் கல்வி நிறுவனங்களுக்கும், தொழிற்பயிற்சி நிலை யங்களுக்கும், திறன் பயிற்சி விரிவு படுத்தப்பட்டிருக்கிறது. எந்த ஒரு பன்னாட்டு நிறுவனமும் தொழில் தொடங்குவதற்கு தேவையான திறன் மிகுந்த மனித வளத்தை தமிழ்நாட்டில் 'நான் முதல்வன் திட்டம்' உறுதி செய்திருக்கிறது. அடுத்த மாதம், தமிழ்நாடு முழுவதும் நடைபெற இருக்கின்ற, தமிழ்நாடு திறன் போட்டிகளுக்கு, இதுவரைக்கும் 58 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். தேசிய அளவில் திறன் போட்டிகள் ஒருங்கிணைக்கின்ற அமைப்பான, தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தினுடைய புள்ளி விவரப்படி, திறன் போட்டிக்கான பதிவு களில் இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதலிடத்தில் இருக்கிறது.  ஐ.ஏ.எஸ்.- ஐ.பி.எஸ்.தேர்வுகளில் தமிழ்நாட்டு மாண வர்களுடைய தேர்ச்சி, நாளுக்கு நாள் குறைந்துகொண்டு வருகிறது. 2016-ஆம் ஆண்டில் இருந்து, 10 விழுக்காட்டுக்கு மேல் என்ற நிலையில் இருந்து, 5 விழுக்காடாக குறைந்து விட்டது. இது என்னை மிகவும் வருந்த வைக்கிறது. இந்த நிலை மாறவேண்டும். நாம்தான் மாற்றவேண்டும்!  அதற்காகத்தான் ‘நான் முதல்வன்’ திட்டத்தினுடைய ஒரு பகுதியாக ஒன்றிய அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வு பயிற்சிப் பிரிவு உருவாக்கப்பட்டது. குடிமைப் பணி தேர்வு எழுதுகிற மாண வர்களுக்கு, இனி பொருளாதாரம் ஒரு தடை யாக இருக்கக்கூடாது என்று, சமீ பத்தில் இரண்டு அறிவிப்புகளை வெளியிட்டி ருந்தோம். முதல் அறிவிப்பு, ஒவ்வொரு ஆண்டும், ஆயிரம் பேருக்கு, முதல்நிலைத் தேர்வுக்கு தயாராக, மாதம் 7,500 ரூபாய் வீதம் 10 மாதங்களுக்கு வழங்கப்படும். இரண்டா வது, முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறக்கூடிய மாணவர்களுக்கு,  25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இந்த பொருளாதார உதவியானது, குடிமைப் பணி தேர்வுக்காக படிக்கின்ற மாணவர்களுக்கு பேருதவியாக இருக்கும்.