டிஜிட்டல் மோசடி: 2 பேர் கைது
சென்னை: சிபிஐ அல்லது சுங்கத்துறை அதிகாரிகள் போல் நடித்து உங்கள் பெய ரில் வந்த பார்சல் ஒன்று எங்க ளிடம் சிக்கியது. இதில் தடை செய்யப்பட்ட போதை பொருட் கள் இருந்தது. இதனால் உங்களை கைது செய்யப் போகிறோம் என்று வீடியோ அழைப்புகள் மூலம் கூறி மோசடியில் ஈடுபட்டு வருகின்ற னர். இந்த மோசடியில் பலரும் சிக்கி தங்களது பணத்தை இழந்துள்ளனர். இது ஒரு புதிய சைபர் மோசடியாகும். இதில், கடந்த மாதம் 3 ஆம் தேதி சென்னை திருவல்லிக் கேணியை சேர்ந்த ஒரு பெண் சுமார் ரூ. 1 லட்சத்தை இழந்து உள்ளார். அந்த பெண் அளித்த புகாரின் பேரில் கும்பகோ ணத்தை சேர்ந்த வெங்கடேஷ், சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த முகமது யூனுஸ் என்கிற 2 பேரை கைது செய்தனர்.
சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன்- நடிகரு மான துஷ்யந்த். இவரும் இவரது மனைவி அபிராமி ஆகியோர் ‘ஈசன் புரொடக்சன்ஸ்’ என்ற நிறுவனத்தின் பங்கு தாரர்களாக உள்ளனர். இந்த நிறுவனம், விஷ்ணு விஷால், நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிப்பில் ஜகஜால கில்லாடி என்ற படத்தைத் தயாரிப்பதற்கு, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் என்கிற நிறுவனத்தை அணுகியுள்ளனர். அந்த நிறுவனம், பல்வேறு தவணைகளில் 4 கோடி ரூபாய் கடன் வழங்கிய நிலையில், அதனை 30 விழுக்காடு வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டும் எனவும், படத்தின் அனைத்து உரிமைகளை வழங்க வேண்டுமெனவும், 2018 அக்டோபருக்குள் படத்தை முடிக்க வேண்டும் எனவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஆனால், துஷ்யந்த் - அபிராமி தொடர்புடைய நிறுவனம், கடன் தொகையைத் திருப்பி தரவில்லை என்று கூறப்படு கிறது. இதைத் தொடர்ந்து, தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொ டர்ந்தது. இது தொடர்பான வழக்கில், நடிகர் சிவாஜி கணே சனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
. நீங்கள் அடித்த கமிஷன் எவ்வளவு?
அண்ணாமலைக்கு அமைச்சர் சூடு
சென்னை, மார்ச் 3 - “2014-ஆம் ஆண்டில் ரூ. 55.87 லட்சம் கோடியாக இருந்த இந்தியாவின் கடன் சுமை, தற்போது ரூ. 181.74 லட்சம் கோடியாக மாறியிருக்கிறது. நீங்கள் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு என்று திருப்பிக் கேட்கலாமா?” என்று பாஜக தலை வர் அண்ணாமலைக்கு, தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சூடு கொடுத்துள்ளார். “தமிழ்நாட்டின் மீது உண்மையில் அக்கறை இருந்தால், நிலுவையில் இருக்கும் கல்வி, நூறு நாள் வேலைத் திட்டம் ஆகியவற்றுக்கான நிதியைப் பெற்றுத் தாருங்கள்” என்றும் கூறியிருக்கும் அமைச்சர், “முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சியை ஒன்றிய அரசின் 2025-ஆம் ஆண்டின் பொருளாதார அறிக்கை பாராட்டியுள்ளது; அவதூறு மட்டுமே பரப்புவது உங்களின் அரசியல் முதிர்ச்சிக்கான போதாமையையே காட்டுகிறது” எனவும் விளாசியுள்ளார்.