tamilnadu

பேனருக்கு முழுமையான தடை

அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை,அக்.5- விழுப்புரத்தில் முன்னாள் எம்எல்ஏ இல்லத் திருமணத் துக்கு வந்த அமைச்சர் பொன்முடியை வரவேற்று, பேனர் வைக்கும் பணியில் ஈடு படுத்தப்பட்ட 12 வயதுச் சிறு வன் தினேஷ் மின்சாரம் தாக்கி  பலியானார். இந்தச் சம்பவ த்தைக் குறிப்பிட்டு, விழுப்புரத் தில் சட்ட விரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதைத் தடுக்க நட வடிக்கை எடுக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, விழுப்புரத்தைச் சேர்ந்த மோக ன்ராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் செவ்வாயன்று (அக். 5) விசாரணைக்கு வந்த போது, அரசு தலைமை வழக் கறிஞர் சண்முகசுந்தரம், பேனர்கள் வைப்பதற்கு ஒப்பந்தம் பெற்றிருந்த ஒப்பந்ததாரர்தான் 12 வயதுச் சிறுவனைப் பணியில் அமர்த்தி இருக்கிறார். இந்தச் சம்பவத்தை அடுத்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும், விழுப் புரம் முதன்மை நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி யுள்ளதாகவும் குறிப்பிட்டார். மேலும், பலியான சிறுவனின் குடும்பத்தினருக்கு தற்காலிக மாக ஒரு லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இதையடுத்து, பேனர்கள் வைப்பதை முழுமையாகத் தடை செய்யும் வகையில், உரிய விதிகளை வகுக்க வேண்டும் எனத் தமிழக அர சுக்கு அறிவுறுத்திய நீதிபதி கள், வழக்குத் தொடர்பாக தமிழக அரசு, திமுக ஆறு வாரங்களில் பதிலளிக்கும்படி உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்தனர்.