tamilnadu

கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி வழக்கு சிபிஐக்கு மாற்றம்

சென்னை,நவ.20- கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூன் மாதம் விஷச்சாராயம் குடித்து 70-க்கும் மேற்பட்டவர்கள் பலி யாகினர்.   இந்த மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலைப்பகுதியில்தான் சாராயம் தயாரித்து, விற்பனை செய்யப்படுவதாகவும், இதில் பலருக்கு தொடர்பு உள்ளதாகவும், அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டினர். விஷசாராய பலி தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பாமக, அதிமுக, பாஜக  கட்சியினர் தனித்தனி யாக வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்குகளை நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.  இந்நிலையில் இந்த வழக்கில் புதனன்று நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பி.பாலாஜி அமர்வு வழங்கிய தீர்ப்பில், கள்ளக் குறிச்சி விஷ சாராய மரண வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றம் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மேல்முறையீடு: அமைச்சர் ரகுபதி  புதுக்கோட்டையில் நவம்பர் 20 அன்று செய்தியாளர்கள் சந்திப்பில்  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறுகையில்,  இந்த வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. சிபிஐ என்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடியது. இவ்வாறு விசாரணையை மாற்றி இருப்பது ஒன்றிய அரசுக்கும், மாநில அரசுக்கும் நிர்வாக சீர்குலை வை ஏற்படுத்தும். தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்வது குறித்து சட்ட ஆலோ சகர்களோடு தமிழக முதல்வர் ஆலோ சித்து நல்ல முடிவை எடுப்பார். சிபிசிஐடி விசாரணையே சரி என்று நிரூபிக்கும் அளவுக்கு எங்களிடம் ஆதாரம் உள்ளதால் மேல்முறை யீட்டில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.