பெரம்பலூர், டிச.1- ஃபெஞ்சல் புயல் காரணமாக பெரம்பலூர் மாவட்டத்தில் சனிக்கிழமை முதல் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் மாவட்டத் தில் வேப்பந்தட்டை வட்டார பகுதி களான தளுதாழை, அரும்பாவூர், அ.மேட்டூர், கொட்டாரகுன்று, மலை யாளப்பட்டி, சின்னட்டுலு, கோரை யாறு, பூஞ்சோலை உள்ளிட்ட பகுதி களில் பயிரிடப்பட்டிருந்த 500 ஏக்க ருக்கும் அதிகமான மக்காச்சோள பயிர்கள் வயல்களில் சோளக் கருது களுடன் சாய்ந்து நாசமானது. சாய்ந்த சோளப் பயிர்கள், வயல்களில் தேங்கி யுள்ள மழைநீரால் அழுகும் சூழல் உள்ளது. இந்த தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.