தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு '
சென்னை, செப்.7- தமிழ்நாட்டில் திங்கள் முதல் முதல் செப்.10ஆம் தேதி வரை ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ”தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் திங்கள் முதல் (செப்.7) முதல் செப்டம்பர் 10ஆம் தேதி வரை ஒரு சில இடங்க ளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். செப்.11 முதல் 13ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. திங்களன்று தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.