tamilnadu

img

சுகாதாரம்மகளிர் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகளில் பெருமைமிகு சாதனைகள்

சுகாதாரம்: மகளிர் குழந்தைகள்  மேம்பாட்டுத் துறைகளில் பெருமைமிகு சாதனைகள்

•    பாலியேற்றிவ் கேர் துறையில் வெற்றிகரமான முன்மாதிரிகள்; உலக சுகாதாரநிறுவனத்தி்ன் பாராட்டுகள்

•    மிக அதிகம் கட்டணமில்லா சிகிச்சை வழங்கிய மாநிலம் •    மூன்றரை ஆண்டுகளில் 2.17 லட்சம் பேருக்கு மொத்தம் ரூ.6,788 கோடிக்கான கட்டணமில்லா சிகிச்சை

•    காஸ்ப் மூலம் 24.06 லட்சம் பேருக்கு 6,271 கோடிக்கான கட்டணமில்லா சிகிச்சை  

•    காருண்யா நிதி மூலம் 62,122 பேருக்கு 473 கோடிக்கான கட்டணமில்லா சிகிச்சை

•    ஆரோக்கிய கிரணம் மூலமாக 8.49 லட்சம் குழந்தைகளுக்கு ரூ.1736 கோடிக்கான கட்டணமில்லா சிகிச்சை

•    கேஎம்சிஎல் மூலம் ரூ.2,700 கோடிக்கும் மேற்பட்ட மருந்துகள் கட்டணமில்லாமல் வழங்கப்பட்டன.

•    853 வகையான மருந்துகள்,1,847 மருத்துவமனைகள்

•    75 காருண்யா மருந்தகங்கள் •    புற்றுநோய்க்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகை மும்மடங்காக அதிகரிப்பு

•    புற்றுநோய்க்கு காருண்யா ஸ்பர்சம் மூலம் குறைந்த விலையில் (0 லாபம்) மருந்துகள்  

•    காருண்யா சுகாதார பாதுகாப்பு திட்டம், காருண்யா பனவலன்ட் நிதி போன்ற திட்டங்கள் மூலம் புற்றுநோய்க்கு இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன் மூலம்  ரூ.1192.19 கோடி மதிப்பிலான சிகிச்சை  அளிக்கப்பட்டுள்ளது. •       தேசிய உணவு பாதுகாப்பு பட்டியலில் கேரளம் முதலிடத்தில் உள்ளது.

•    தேசிய நிதி ஆயோக் பட்டியலில் கேரளத்திற்கு முதலிடம்.

•    மிக குறைந்த தாய் – சேய் மரணம் கொண்ட மாநிலம்

•    பல் மருத்துவத்தில் தேசிய அளவில் விருது.

•    அரசுத்துறையில் முதன்முறையாக ரோபோட்டிக் அறுவை சிகிச்சை.

•    கேரளத்தின் சுகாதார திட்டங்களை இதர மாநிலங்களும் செயல்படுத்தும் நிலை.

•    அரிய வகை நோய்களுக்கான சிகிச்சையில்  குறிப்பிடத்தக்க கால்பதிப்பு; கேர் திட்டம் அமலாக்கப்பட்டது.

•    எஸ்ஐடி மருத்துவமனை சென்டர் ஆப் எக்சலன்ஸ். நாடு முழுவதும் உள்ள சிறந்த பத்து மருத்துவமனைகளில் ஒன்றாக இடம்பிடித்து சாதனை.

•     மனநல மறு ஆய்வுக்கான நான்கு வாரியங்கள் அமைக்கப்பட்டன.

•    அனைத்து ஒன்றியங்களிலும்ஏ.எம்.ஆர் குழுக்கள் அமைக்கும் முதலாவது மாநிலம்

•    நாட்டிலேயே முதலாவது தாய் சேய் நட்பு மருத்துவமனை முன்முயற்சி

 •    பொதுமக்கள் விவகாரங்கள்  குறியீட்டில் மிகவும் உயர்ந்த நிலையில் உள்ள மாநிலம் •    ஆக்சிஜன் கிடைப்பதை உறுதி செய்ததில் கேரளம் முன் மாதிரி என உலக சுகாதார நிறுவன அறிக்கை. •    அரசுத்துறையில் புதிதாக 8 செவிலியர் கல்லூரிகளுக்கு 400 இடங்களுக்கான அனுமதி •    சீமென்ஸ் நிறுவனத்தின் கீழ் 420 இடங்களுடன் 7 செவிலியர் கல்லூரிகள். •    திருவனந்தபுரத்திலும் ஆலப்புழாவிலும் எம்.எஸ்.சி மனநல செவிலியர் படிப்புகள் •    ஆலப்புழா, கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிகளில் பன்னோக்கு சிகிச்சைப் பிரிவு துவக்கப்பட்டது. ஒப்பீடற்ற வளர்ச்சி கேரள சுகாதாரத்துறையால் இத்தகைய சுமார் 400 இனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றின் சிறப்பான செயல்பாடுகளின் பின்னணியில் தேசிய சர்வதேசிய அளவில் 28 விருதுகளை கேரள சுகாதாரத்துறை பெற்றுள்ளதாக  அந்த பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.  2016 இல் சுகாதாரத்துறைக்கான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.665 கோடி. 2023-24 இல் இது ரூ.2,828 என நான்கு மடங்காக அதிகரித்தது. பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் 2024 – 25இல் ரூ.2,824 கோடியாக அதிகரித்தது.  ஆயுஷ் துறையில் பெரும் முன்னேற்றம் இந்த அரசு அதிகாரத்துக்கு வந்த பிறகு ஆயுஷ் என்கிற மாற்று மருத்துவத்துக்கு மூன்றாண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இது மும்மடங்கு அதிகரிப்பாகும்.  ஆயுர்வேத சிகிச்சைத்துறையை வலுப்படுத்த புதிதாக 116 பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. ஓமியோபதி பிரிவில் புதிதாக 40 மருத்துவ அதிகாரிகள் பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. வாழ்வியல் நோய்களை தடுக்க முக்கியத்துவம் அளித்து ஆயிரம் ஆயுஷ் யோகா மையங்கள் துவக்கப்பட்டன. ஆயுஷ் துறையில் கேரளத்தின் முன்னேற்றத்தை நிதி ஆயோக் பாராட்டியுள்ளது. 150 அரசு ஆயுஷ் நிறுவனங்களுக்கு என்.ஏ.பி.எச். அங்கீகாரம் கிடைத்துள்ளது. 40 புதிய ஓமியோ மருந்தகங்கள் துவக்கப்பட்டு,  அனைத்து பஞ்சாயத்துகளிலும் ஓமியோ மருந்தகங்கள் என்கிற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் அரசு ஓமியோபதி  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புதிதாக குழந்தைகள் மற்றும் பல் சிகிச்சை புறநோயாளிகள் பிரிவு துவக்கப்பட்டன.  அட்டப்பாடி பழங்குடி கிராமங்களில் மக்களிடம் காணப்படும் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும் சாத்தான உணவு கிடைப்பதை உறுப்படுத்தவும் கூட்டமைப்பு உருவாக்கி  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  போக்ஸோ வழக்குகளில் பாதிக்கப்பட்டு மீண்டோருக்காக மாதிரி எஸ்ஓஎஸ் இல்லங்கள் அமைக்கப்பட்டன. புதிய நிர்பயா கொள்கை கொண்டுவரப்பட்டது.