தடுத்தார், அபகாரித்தார், கைப்பற்றினார்! அன்புமணி மீதான குற்றச்சாட்டுகளை பட்டியலிட்ட ஜி.கே.மணி
சென்னை, ஆக.17 - பாமக மாநில சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அருகே நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்தப் பொதுக் குழுவில், அன்புமணி மீதான 16 குற்றச்சாட்டுகள் என்னென்ன? என்பது குறித்து ஜி.கே.மணி பட்டியலிட்டார். அதில், “மைக்கை தூக்கிப் போட்ட துடன், பனையூர் அலுவலகத்துக்கு வரச் சொல்லி தொண்டர்களுக்கு கைப்பேசி எண் கொடுத்தது. தைலாபுரத்தில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்திற்கு, 100 மாவட்டச் செயலாளர்களை வராமல் தடுத்தது. சமூக ஊடகங்களில் ராமதாஸ் பற்றி அவதூறான, அருவருக்கத்தக்க, இழிவுபடுத்தும் செய்தி களை வெளியிட்டது. சமரச பேச்சு வார்த்தையை ஏற்றுக் கொள்ளாமல் உதா சீனப்படுத்தியது. ராமதாஸ் இருக்கைக்கு கீழ் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது. அனுமதி பெறாமல் பொதுக் குழுவில், தனி இருக்கை, துண்டு வைத்து, ‘ராமதாஸுக்கு நல்ல புத்தி கிடைக்க’ வேண்டியது. அனுமதியை மீறி ‘உரிமை மீட்க தலை முறை காக்க’ என்ற நடைபயணம் கபட நா டகம். ராமதாஸை சந்திக்க வருவோரிடம், பணமும் பதவியும் தருவதாக ஆசை வார்த்தை கூறி பனையூருக்கு கடத்திச் செல் வது. புகைப்படம், பெயர் விவகாரத்தில் ராம தாஸ் வலியுறுத்திய பின்னரும், கூட்டங்க ளில் தொடர்ந்து கொச்சைப்படுத்தி பேசி வரு வது. பசுமைத் தாயகம் அமைப்பை திட்ட மிட்டு கைப்பற்றிக் கொண்டது. ராமதாஸ் அனுமதி பெறாமல் பொதுக்குழு கூட்டி, அவ ருக்கே தனி இருக்கை வைத்து துண்டு அணிவித்தது. பாமக தலைமை அலுவலகத்தை, ராம தாஸுக்கு தெரியாமலேயே மாற்றியது. ராம தாஸிடம் எதுவுமே பேசாமல், 40 முறை பேசிய தாக பொதுவெளியில் சொன்னது. ஜி.கே. மணி, அருள் ஆகியோர் மருத்துவமனையில் இருந்தபோது, கூட்டுப் பிரார்த்தனை செய்வ தாக கேலி கிண்டல் செய்தது. ராமதாஸ் நீக்கியவர்களை மீண்டும் கட்சியில் சேர்த்தது செல்லாது. மக்கள் தொலைக் காட்சியை அபகரித்தது. இத்தகைய 16 குற்றச்சாட்டுகளை முன் வைத்து அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க, பாமக நிறுவனர் ராமதாஸ்-க்கு, 8 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரை செய்ததாக ஜி.கே.மணி தெரிவித்தார்.