ஹரித்வார் ‘தரம் சன்சத்’ மாநாட்டில், இந் தியாவை இந்து நாடாக்க, இஸ்லாமியர்களை படு கொலை செய்வோம் என்று பேசப்பட்டது தொடர்பாக, உச்ச நீதி மன்றம் விசாரிக்க வேண் டும் என்று பத்திரிகையாளர் குர்பான் அலி, பாட்னா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஞ்சனா பிரகாஷ் ஆகியோர் பொதுநல வழக்கு தொடர்ந்தனர். மூத்த வழக்கறி ஞர் கபில் சிபல் இந்த வழக்கில் ஆஜ ரானார். இதனை ஏற்று, வெறுப்புப் பேச்சு பற்றி விசாரிக்க, தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு ஒப்புக் கொண்டுள்ளது.