tamilnadu

img

வண்ணக்கதிர் 4

உழைப்பே உயர்வு இரா.செந்தில்குமார்

உழைப்பே உயர்வு தந்திடும் -இதை உணர்ந்தால் உலகம் உயர்ந்திடும் பிழைக்கும் வழியைக் கண்டிடு -பிறர் போற்ற நீயும் வாழ்ந்திடு  செய்யும் தொழிலே தெய்வம்-இதைச் செய்தால் துயரம் நீங்கும் கைவினை ஒன்றைக் கற்றால் - உன்  கவலை எல்லாம் தீரும்  நாடும் வீடும் நமக்கே - நாம் வாழ்வோம் என்றும் பிறர்க்கே உழைப்பே நமது மூலதனம் -இதை உணர்ந்தால் வருமே வருமானம்  சோம்பலைப் போக்க உழைத்திடு- உன் சோகத்தை நீக்கப் பாடுபடு உழைப்பே உனது மூலதனம் -இதை உணராது போனால் அவமானம்  உழைப்பை உயர்வாய் நினைத்திடு - இதை உணர்ந்து நீயும் செயல்படு பற்பல தொழில்கள் வளரனும்- நம் பாரினை சிறப்பாய் உயர்த்தணும்.