இன்று குரூப்-1, 1ஏ முதல் நிலை தேர்வு
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் சார்பில் உதவி ஆட்சியர், டி.எஸ்.பி., வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் உள்பட குரூப்-1 பணியிடங்களில் 70 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. குரூப் 1 தேர்வை 2.27 லட்சம் பேரும், குரூப் 1ஏ தேர்வை 6,465 பேரும் எழுதுகின்றனர். இதற்கான முதல்நிலை போட்டித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) நடைபெறு கிறது. தமிழகத்தின் 38 மாவட்டங்கள் மற்றும் 6 தாலு காக்கள் என மொத்தம் 44 இடங்களில் தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு கண்காணிப்பு பணியில் 987 பேர் ஈடுபடு கிறார்கள்.
20,317 விண்ணப்பங்கள்
சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு கடந்த மே 26 ஆம் தேதி தொடங்கியது. இதுவரை 20,317 பேர் விண்ணப்பித் துள்ளனர். விண்ணப்பிக்க ஜூன் 27 ஆம் தேதி கடைசி நாளா கும். மேலும் விபரங்களை https://adm.tanuvas.ac.in இணையதளத்தில் பெறலாம்.
நிதி ரூ.5 லட்சமாக உயர்வு
சென்னை: தமிழகத்தில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட வணிகர்கள் மளிகை, ஜவுளி, காய்கறி, பழ வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் நலனுக்காக தமிழக அரசின் வணிகர் நல வாரியம் செயல்படுகிறது. நலிவடைந்த வணிகர் குடும்பத்திற்கு குடும்ப நல நிதி உதவியாக முன்னர் 3 லட்சம் ரூபாய் வழங்கப் பட்டு வந்தது. இதை உயர்த்தி வழங்குமாறு வணிகர்கள் கோரிக்கை விடுத்ததை அடுத்து, முதலமைச்சர் இந்த நிதியை 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்.
வடிவேல் ராவணன் பங்கேற்பு
சென்னை: பாமக பொதுச் செயலாளர் வடிவேல் ராவ ணன் காணவில்லை என்று நிறுவனர் ராமதாஸ் கூறிய நிலையில், சென்னை பனையூரில் அன்புமணி நடத்திய மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் வடிவேல் ராவணன் பங்கேற் றார்.
அட்லிக்கு டாக்டர் பட்டம்
சென்னை: திரைப்பட இயக்குநர் அட்லிக்கு சென்னை சத்தியபாமா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி யிருக்கிறது.
கடலூர் மீனவர்களுக்கு தடை
கடலூர்: வானிலை எச்சரிக்கை காரணமாக கடலூர் துறை முகம் மீனவர்கள் 2 நாட்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்காலம் சனிக்கிழமை யுடன் நிறைவடையும் நிலையில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தயாராக இருந்தனர். வங்கக் கடலில் மணிக்கு 70 கி.மீ. வரை சூறாவளி காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாஜக மாநில நிர்வாகி நீக்கம்
சென்னை: “தமிழக பாரதிய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்டோர் அணியின் மாநிலச் செயலாளராக பணி யாற்றி வந்த கே.ஆர்.வெங்கடேஷ், பல்வேறு குற்ற வழக்கு களில் தொடர்புடையதால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு களங்கம் விளை விக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்ததாலும், கட்சியின் அனைத்து பொறுப்பில் இருந்தும் நீக்கப்படுகிறார்” என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
கோயில் இடத்தில் அடக்கம் செய்யக் கூடாது!
மதுரை: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரைச் சேர்ந்த எஸ். வெங்கடேஷ், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “திருச்செந்தூர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில், இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படு கின்றன. கோயில் இடத்தை அடக்க ஸ்தலமாக பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டப்படி, இறந்தவர்கள் உடல்களை அடக்கம் செய்ய அல்லது எரியூட்ட, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெறப்பட்ட இடங்களை தவிர்த்து, வேறு எந்த இடத்தையும் பயன் படுத்தக் கூடாது. எனவே, திருச்செந்தூர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில், இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக் கூடாது. உடல்களை அடக்கம் செய்ய மாற்று இடம் தேர்வு செய்ய வேண்டும்” என உத்தரவிட்டனர்.
செந்தில் பாலாஜி பதிலளிக்க உத்தரவு
சென்னை: மின்மாற்றிகள் கொள்முதலுக்கான டெண்டரில் முறைகேடு நடந்ததால் அரசுக்கு ரூ.397 கோடி இழப்பு ஏற் பட்டுள்ளதாக அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பதில் அளிக்க சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
சிபிஐ நீதிமன்றம் உத்தரவு
மதுரை: மேலூர் கீழவளவு பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தில், சட்டவிரோத மாக கிரானைட் கற்கள் எடுத்து அரசுக்கு ரூ.259 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக, ஒலிம்பஸ் கிரா னைட் நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர் களான எஸ்.நாகராஜன் மற்றும் மத்திய முன் னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி ஆகியோர் மீது 2012-ல் கீழவளவு போலீ சார் வழக்குப் பதிவு செய்தனர். இதிலிருந்து விடு விக்கக் கோரிய வழக்கில், மு.க.அழகிரி மகனின் மருத்துவ ஆவணங்களை முழுமையாக தாக்கல் செய்யுமாறு கூறி, விசாரணையை ஜூன் 16 ஆம் தேதி ஒத்திவைத்து, மதுரை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
‘இபிஎஸ் முடிவு செய்வார்’
சேலம்: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்ட ணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு எத்தனை இடம் என்பதை அதிமுக பொதுச் செய லாளர் எடப்பாடி கே.பழனிசாமிதான் முடிவு செய் வார் என்று தமிழக பாஜக மாநில துணைத் தலை வர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்தார்.
ஜுன் 24-க்கு ஒத்திவைப்பு புதுக்கோட்டை
: வேங்கைவயல் பட்டிய லினக் குடியிருப்பில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட சம்பவத்தில், விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீசார், அதே கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு புதுக்கோட்டை குற்றவியல் நடுவர் மன்றம் 2 இல் நடைபெற்று வருகிறது. இந்நிலை யில், வியாழக்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டப்பட்ட 3 பேரும் நீதிமன்றத் தில் ஆஜராயினர். வழக்கு விசாரணையை ஜுன் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதித்துறை நடுவர் ஜி. அற்புதவாணன் உத்தரவிட்டார்.
ட்ரோன்கள் பறக்க தடை
தஞ்சாவூர்: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தர வுள்ளதையொட்டி, பாதுகாப்பு காரணம் கருதி, ஜுன் 15, 16 ஆம் தேதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சி யர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
வழக்கு தள்ளுபடி
சென்னை: சென்னை யில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் மகளிர் கல்லூரியில் தமிழ் வழி யில் கல்வி பயின்றோ ருக்கு முன்னுரிமை வழங்காமல் மேற்கொள் ளப்பட்ட 5 உதவி பேரா சிரியர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்ததை எதிர்த்த வழக்கை தள்ளு படி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
உடுமலை: அமராவதி அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இத னால் அமராவதி ஆற்றில் உபரி நீர் திறக்க வாய்ப்பி ருப்பதால், கரையோர கிரா மங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்ச ரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது என திருப்பூர் ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
மருந்தியல் கல்லூரிகளுக்கு நோட்டீஸ்
சென்னை: பேராசிரி யர்கள் பற்றாக்குறை, அடிப்படை வசதிகளில் குறைபாடு போன்ற கார ணங்களை முன்வைத்து தமிழக அரசு மருந்தியல் கல்லூரிகளுக்கு இந்திய மருந்தியல் கவுன்சில் (பிசிஐ) நோட்டீஸ் அனுப்பி யுள்ளது. அதன்படி, சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் மதுரை மருத்துவக் கல்லூரி களின் கீழ் இயங்கும் மருந்தியல் கல்லூரிகளில் உரிய விதிகளின்படி பேராசிரியர்கள் உள்ள னரா என்பது தொடர்பான விவரங்களைச் சமர்ப் பிக்க மூன்று மாத அவ காசம் அளிக்கப்பட்டு உள்ளது. இல்லையெனில் நிகழாண்டுக்கான மாண வர் சேர்க்கை அங்கீகாரம் ரத்து செய்யப்படக்கூடிய நிலை ஏற்படும்.