சென்னை, மார்ச் 22- சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது வனத் துறை சம்பந்தமாக அதிமுக உறுப்பினர்கள் பல்வேறு கேள்வி களை எழுப்பினார் இதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்,”தமிழ்நாட்டில் ஆண்டுக்கு இரண்டரை கோடி மரங்கள் நடும் திட்டத்தை அரசு துவங்கியிருக்கிறது. இந்தத் திட்டத்திற்காக 261 கோடி ரூபாய் ஒதுக்க ப்பட்டுள்ளது இதன்மூலம் தமிழ்நாடு பசுமை மாநிலமாக மாறும் என்றார்.