tamilnadu

img

போதைப்பொருள் பயன்பாட்டை ஒழிக்க மாபெரும் இயக்கம்!

சென்னை, ஜூன் 11- சென்னை தலைமைச் செயலகத்தில் திங்களன்று (ஜூன் 11) மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கே ற்றார். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, திரு வாரூர் மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் சட்டம்  - ஒழுங்கு பிரச்சனை, அதனைக் கையாண்ட விதம், அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங் களின் நிலை எவ்வாறு உள்ளது? எந்த அளவுக்கு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்பது பற்றி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம்  விரைவில் துவங்கப்படும்! இந்தக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,“ புதுமைப்பெண் திட்டம் போல,  மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் ‘தமிழ்ப்  புதல்வன் திட்டம்’ விரைவில் தொடங்கப்படும்” என்றார். “அரசின் திட்டங்களைக் கடைக்கோடி மனிதரிடமும் கொண்டு போய் சேர்த்ததில் பெரும் பங்கு அரசு அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் இருக்கிறது” என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். “தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை பெருமளவில் கட்டுப்படுத்தி இருக்கிறோம். போதைப் பொருள் நடமாட்டம் என்பது சட்டம் - ஒழுங்கு பிரச்சனை மட்டுமல்ல சமூக ஒழுங்கு பிரச்சனை. போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும், அதற்கு பெரும் இயக்கத்தை தொடங்க இருக்கிறோம். போதைப் பொருள் நடமாட்டம் இருக்கும் என கண்டறியப்பட்ட பகுதிகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.  போதைப் பொருட்களின் நடமாட்டம் அறவே இல்லை, முற்றுப்புள்ளி வைத்து விட்டோம் என்ற நிலையை உருவாக்க வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார். ஜூலை 15 முதல் மக்களுடன் முதலமைச்சர் ‘மக்களுடன் முதலமைச்சர்’ திட்டத்தை, ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 வரை ஊரகப் பகுதிகளில் செயல்படுத்துவது என்றும் இந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தங்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ. 75 லட்சம்

மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் ஜப்பான் நாட்டின் கோபே நகரில் கடந்த மாதம் நடைபெற்றது. இந்தியா சார்பில் ஏராளமான வீரர்,  வீராங்கனைகள் பங்கேற்றனர்.  இதில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு 1.88 மீட்டர் உயரம் தாண்டி தங்கப் பதக்கம் வென்றார். உலக பாரா தடகளப் போட்டியில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில், உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ரூ. 75 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார். அப்போது விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.