மன்னார்குடி, ஜன.31 - படத்தில் நாம் காணும் இந்த இடம் திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடி-கொரடாச்சேரி சாலையில் வாளாச்சேரி பாலத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்குள் இருக்கும் முள்ளிப்பள்ளம் கிராமம். நீடாமங்கலம் ஒன்றியம் அதங்குடி ஊராட்சியில் உள்ள இந்த உள்கிராமத்தில் அருந்ததிய குடும்பங்கள் உள்ளன. 30-க்கும் மேற்பட்ட இந்த குடும்பங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இவர்கள் நின்று கொண்டிருக் கும் இவ்விடத்தில் உள்ள மழைநீர் தேக்கத்தை தாண்டிதான் அவர்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும். இதுபோல் இவர்களது நிறைய அடிப்படை கோரிக்கை கள் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் உள்ளன. இந்நிலையில், சிபிஎம் நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் ஜான் கென்னடி, மாவட்ட செயற்குழு உறுப்பி னர் பி.கந்தசாமி, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் பி.காளியப்பன், ஆர்.குணசேக ரன் உள்ளிட்டோர், அவர்கள் வசிக்கும் இடத்திற்குச் சென்று சந்தித்தனர். இதுகுறித்து மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.கந்தசாமி கூறுகையில், “யாரேனும் ஒருவர் மரணம் அடைந்துவிட்டால் இறுதிநிகழ்ச்சிக்கு சுடுகாடு இல்லை. இவர்களுக்கு, பாதையோடு கூடிய சுடுகாட்டிற் கான இடம், எரியூட்டும் கொட்டகை உடனே வேண்டும். இதுதான் முதன்மை கோரிக்கையாக உள்ளது. சாதியமும் தீண்டாமையும் கிராமங்களை இன்ன மும் ஆக்கிரமித்திருக்கும் இக்காலத்தில், எந்த மயா னத்திலும் இவர்களின் சடலங்களை எரியூட்டுவதற்கு அனுமதியில்லை. சாலையில் ஏதோ ஓரிடத்தில்-ஓரத்தில் சடலங்கள் எரிக்கப்படுகின்றன. சமீபத்தில் மழை விடாமல் பெய்து கொண்டிருந்தபோது, ஒருவர் மரணமடைந்தார். அவரது சடலத்தை எரியூட்டுவதற் குள், இந்த அருந்ததிய குடும்பங்கள் பரிதவித்து போனதாக தகவல்கள் கிடைத்தன. அதன் பிறகுதான் இந்த பிரச்சனையை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முதன்மை செயல் திட்டமாக எடுத்துக் கொண்டது. இந்த மக்கள் அனைவரும் அடுத்தடுத்து அருகா மையில் இருக்கும் ஊராட்சி, பேரூராட்சிகளில் நிரந்தர மில்லா தூய்மைப் பணியாளர்களாக உள்ளனர். இந்தக் குடும்பங்களில் உயர்கல்வி படிக்கும் குழந்தைகள் உள்ளனர். எனவே, போர்க்கால அடிப்படையில் ஊராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் பாதையுடன் கூடிய சுடுகாட்டிற்கான இடமும் கொட்டகையும் கட்டு வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது உடனடி கட்டாயத் தேவை” என்றார்.