சென்னை, ஜூலை 19 - தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்ட 4 சட்டத்திருத்த மசோதாக் களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இவற்றில் புதுக்கோட்டை, திரு வண்ணாமலை, நாமக்கல் மற்றும் காரைக்குடி ஆகிய 4 நகராட்சி களையும் மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான மசோதா, சென்னை மாநகரக் காவல் சட்டத்தை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ராப்பள்ளி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர் ஆகிய நகரங்களுக்கும் விரி வாக்கம் செய்வதற்கான சட்டத் திருத்த மசோதா ஆகியவை முக்கிய மானவை. இதேபோல ஊரக உள்ளாட்சிகளை, நகர்ப்புற உள்ளாட்சிகளுடன் இணைக்கும் போது சொத்துக்களை மாற்றம் செய் வதற்கான சட்டத்திருத்த மசோதா சென்னையில், தனியார் வளாகம் கழிவுநீரை வாரியத்தின் கழிவு நீர்ப் பாதையில் வெளியேற்று வதற்காக இணைப்பு பெறுவதை கட்டாயமாக்குவதற்கான மசோதா ஆகிய நான்கு மசோதாக்களுக்கும் ஆளுநர் ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.