tamilnadu

img

ஆளுநரின் ஊட்டி மாநாடும் தகிக்கும் சட்டப்பேரவையும் - மதுக்கூர் இராமலிங்கம்

மாநிலத்தின் தலைநகரில் குடியிருந்து கொண்டு கூட்டாட்சிக்கு குழி பறிப்பதை இனியும் அனுமதிக்கக் கூடாது. ஆளுநருக்கு ஒன்றும் வானளாவிய அதிகாரங்கள் அரசியல் சட்டத்தால் வழங்கப்படவில்லை. 

தமிழகத்தில் உள்ள பல்கலைக்  கழகங்களில் துணைவேந்தர் களை மாநில அரசே நியமிக்க வகை செய்யும் சட்ட முன்வடிவு சட்டப் பேரவை யில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது  ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வா கும். கல்வித்துறையை ஒத்திசைவுப் பட்டியலிலிருந்து மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வரும் நிலை யில், சட்டப்பேரவை நிறைவேற்றியுள்ள இந்த சட்ட முன்முடிவு ஒரு முன்னோட்ட மாகும். உயர்கல்வி நிலையங்களிலும், மத்  தியப் பல்கலைக்கழகங்களிலும் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட அரை குறை அறிவாளிகளை ஒன்றிய அரசு துணைவேந்தர்களாக நியமித்து பல்கலைக்கழகங்களை ஆர்எஸ்எஸ்  பயிற்சிக் கூடங்களாக மாற்றி வரும்  நிலையில், இந்த மசோதாவினால் துணைவேந்தர் நியமனத்தில் அரசியல் தலையீடு வரும் என்ற அபத்தமான கார ணத்தைக் கூறி பாஜக பேரவையிலி ருந்து வெளிநடப்பு செய்திருக்கிறது. மாநிலங்கள் என்கிற கட்டமைப்பையே அழித்து அனைத்து அதிகாரங்களை யும் மத்தியில் குவிக்க விரும்புகிற அவர்களது குரூர புத்தியின் வெளிப் பாடு இது.

பாஜக ஆளும் குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் மாநில அரசின் பரிந்துரையின் பேரிலேயே, துணை வேந்தர்கள் நியமிக்கப்படுகிறார்கள். ஆனால், தமிழகத்தில் மட்டும் அது கூடாது என்று பாஜக கூறுவது கேலிக்  கூத்தானது. ஆந்திரா மற்றும் தெலுங் கானா மாநிலங்களிலும் மாநில அரசு கள்தான் துணைவேந்தர்களை நிய மிக்கிறது. ஆனால் இந்த மசோதாவை தொடக்க நிலையிலேயே எதிர்த்து வெளிநடப்பு செய்கிறது பாஜக. ஆனால், பாஜகவின் வால் போல  ஒட்டிக் கொண்டு அதிமுகவும் எதிர்த்து வெளிநடப்பு செய்துள்ளது. வெளி நடப்பு செய்வதற்கான காரணத்தை தேடி அதிமுகவினர் களைத்துப் போயி ருந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தலை வர் கு.செல்வப்பெருந்தகை கூறிய ஒரு கருத்தை காரணம் காட்டி, ரகளை செய்துவிட்டு எங்களுக்கு மரியாதை இல்லை. எனவே, வெளிநடப்பு செய்கி றோம் என பாஜகவுக்கு பாதகம் இல் லாத முடிவை எடுத்துள்ளனர். ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, 28 ஆண்டுகளுக்கு முன்பே இத்  தகைய ஒரு மசோதாவை தமிழக சட்டப்  பேரவையில் அதிமுக அரசு நிறை வேற்றியுள்ளது. 1994 ஆம் ஆண்டு பல்க லைக்கழக துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்க வேண்டும் என்ற  மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் அப்போதைய ஆளுநர் சென்னாரெட்டி, இதற்கு ஒப்புதல் வழங்கவில்லை.

அதேபோன்ற மசோதா இப்போது கொண்டு வரப்படும்போது, அதை அதி முக ஆதரிப்பதுதானே நியாயமானது. ஆனால் இப்போதோ மரியாதை ராமர்  களாக மாறி சுயமரியாதை உணர்வு கொப்பளிக்க வெளிநடப்புச் செய்துள்  ளனர் அதிமுகவினர். நீட் தேர்விலி ருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி இவர்களது ஆட்சியில் நிறை வேற்றப்பட்ட மசோதாவை அப்போ தைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல், மசோதாவை குப்பைத் தொட்டியில் தூக்கி எறிந்தபோது, இவர்களது மரி யாதையை எந்தக் கடையில் அடகு வைத்திருந்தார்கள் என்று தெரிய வில்லை. முந்தைய அதிமுக ஆட்சிக் காலத் தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா என்பவரை ஆளுநர் நியமித்தார். மாநில அரசிடம் மரியாதைக்கு கூட கருத்துக் கேட்க வில்லை. அப்படி வந்த சூரப்பா, மாநில அரசை கேட்காமல் அண்ணாப் பல்க லைக்கழகத்தை அப்படியே தூக்கி ஒன்  றிய அரசிடம் கொடுக்க துணிந்தார். அதை அப்போதைய அதிமுக அரசு கடுமையாக எதிர்த்தது. பின்னர், அதி முக அரசுதான் சூரப்பாவின் மீது ஊழல் வழக்கும் தொடுத்தது. எதிர்காலத்தில் சூரப்பாக்கள் உருவாவதைத் தடுக்க திமுக அரசு கொண்டு வந்துள்ள மசோதா  நிச்சயமாக உதவும். ஆனால், பாஜக வின் கடைக்கண் பார்வைக்கேற்ப கட்சி நடத்தும் அதிமுக அதற்குத் தயாராக இல்லை.  அவர்களது கட்சியின் பெயரிலும் கொடியிலும் அறிஞர் அண்ணா இருக்கி றார். மாநில சுயாட்சிக்காக ஓங்கிக் குரல் கொடுத்தவர் அவர். ஆனால் இவர்களோ அண்ணா திமுகவை, அண்ணாமலை திமுகவாக மாற்றி, ஆளுநர் மாளிகையின் கிளைக் கழ கமாக மாற்றிவிட்டனர்.

ஆட்டுக்குத் தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்றவர் அண்ணா. ஆட்டுக்குத் தாடிகூட அதன் உடலிலேயே சேர்ந்திருக்கிறது. ஆனால் ஆளுநர் பதவி என்பது, ஒன்றிய அரசினால் ஒட்டப்படும் தாடிதான். இது ஒரு நியமன பதவியே அன்றி, மக்க ளால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசை விட அதிக அதிகாரம் கொண்டதல்ல. தலை ஆட்டுவதற்கேற்ப தாடியும் சேர்ந்து ஆடுவதுதான் இயல்பு. ஆனால் இப்போது தாடி தலையை ஆட்ட முயல்கிறது. தமிழகத்திற்கென்று  தனிக் கல்விக்கொள்கையை உரு வாக்குவதற்கு மாநில அரசு குழு ஒன்றை நியமித்திருக்கிறது. ஆனால், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை நடை முறைப்படுத்துவது குறித்து ஊட்டி யிலே மாநாடு கூட்டுகிறார். மாநில அமைச்சர்களுக்கு அழைப்பில்லை. ஆனால், ஆர்எஸ்எஸ் துதிபாடியும், ஷோகோ என்ற தனியார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலருமான ஸ்ரீதர் வேம்பு அழைக்கப்பட்டிருக்கிறார். இதுதான் அரசியல் கலப்பில்லாமல், ஆளுநர் கிண்டும் அல்வாவின் சிறப்பு.

இந்த மாநாட்டில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசும்போது, ஒன்றிய அரசின் கல்விக் கொள்கையை பல்கலைக்கழ கங்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கறார் காட்டியிருக்கிறார். காவி மயம், கார்ப்பரேட்மயம், ஒன்றியமயம் என்ற மும்மையே ஒன்றிய அரசின் கல்விக் கொள்கை. குருகுலக் கல்வியை அடிப்படையாகக் கொண்ட, நுழைவுத் தேர்வு என்ற பெயரில் இளைய இந்தியா வின் முதுகெலும்பை முறிக்கிற, தகுதி, தரம் என்ற பெயரில் ஏழை-எளிய, பிற்  படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி யின மற்றும் கிராமப்புற மாணவர் களை கல்விச் சாலைக்கு வரவிடாமல், கழுத்தைப் பிடித்து தள்ளுகிற கல்விக் கொள்கைக்கு ஊட்டியில் உள்ள ஆளு நர் மாளிகையில் மாநாடு கூட்டி, நடை பாவாடை விரிக்கப்படுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய யுஜிசி தலைவர் ஜெகதீஸ்குமார், ஒன் றிய அரசின் கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்துங்கள் என்று உத்  தரவிட்டிருக்கிறார். அப்போதுதான், மாணவர்களை சிந்தனையாளர்களாக மாற்ற முடியும் என்று கூறியுள்ளார்.  புதிய கல்விக்கொள்கை நடை முறைக்கு வந்துவிட்டால், இனி நாம் எப்படி படிப்பது என மாணவர்கள் சிந்திக்கத் துவங்குவார்கள். அதைத்  தான் அவர் கூறியுள்ளார் போலிருக்கி றது.

சட்டப்பேரவையில் சட்டமுன் வடிவை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டா லின் பேசும்போது, கடந்த 4 ஆண்டு களில் துணைவேந்தர் நியமனத்தில் மாநில அரசை கலந்து ஆலோசிக்கும் நடைமுறை இல்லை என்பதை சுட்டிக்  காட்டியுள்ளதோடு, அரசியல் சட்டத்தில் வழங்கப்படாத அதிகாரத்தை ஆளு நருக்கு அளிக்கக் கூடாது என்று பொருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார்.  மாநிலத்தின் தலைநகரில் குடி யிருந்து கொண்டு கூட்டாட்சிக்கு குழி பறிப்பதை இனியும் அனுமதிக்கக் கூடாது. ஆளுநருக்கு ஒன்றும் வான ளாவிய அதிகாரங்கள் அரசியல் சட்டத்தால் வழங்கப்படவில்லை.  அரசின் சட்டமுன் வடிவை ஆத ரித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற குழுத் தலைவர் நாகைமாலி, இந்த மசோதாவை முழு மையாக வரவேற்கிறோம் என்று கூறி யிருக்கிறார். காலனியாதிக்க நடை முறைக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற குரல் சட்டமன்றத்தில் ஓங்கி ஒலித்தி ருக்கிறது.  இந்த மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்க வேண்டிய இடத்தில் ஆளு நர்தான் இருக்கிறார் என்பது ஒரு நகை முரண். சட்டமன்றத்தின் தீர்மானம் செயல் வடிவம் பெறுவதற்கான அழுத்  தத்தை அவருக்குத் தர வேண்டியது மக்கள் மன்றத்தின் கடமை.