tamilnadu

img

பொன் விழா ஆண்டு புகைப்பட கண்காட்சி திறப்பு

மதுரை, மே 28-  அரசு போக்குவரத்து மதுரை தொழி லாளர் சங்கம் (சிஐடியு) 50 ஆவது ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு போக்குவரத்துத் தொழிலாளர்களின் “ 50ஆண்டுகள்  போராட்ட வரலாற்றுக் கண்காட்சி “வெள்ளியன்று திறந்து வைக்கப்பட்டது.  மதுரை புறவழிச் சாலை அரசு போக்குவரத்து தலைமை யகம்  முன்பு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை  சங்கத்தின்  துணைப் பொதுச் செயலாளர் எஸ். மணிமாறன் தலைமையில் தீக்கதிர் நாளிதழ் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம்  திறந்து வைத்தார் .  சங்கத்தின் ஸ்தாபக தலை வர்களில் ஒருவரான   எஸ். ஏ. பெரு மாள், சிஐடியு மதுரை  மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர். தெய்வராஜ், புறநகர் மாவட்டச் செயலாளர் கே. அரவிந்தன், மதுரை மாநகராட்சி துணை மேயர் டி. நாகராஜன் ஆகியோர்  வாழ்த்திப் பேசினர். இந்நிகழ்ச்சியில் மாநில  சம் மேளன துணைத் தலைவர் வீ. பிச்சை, மதுரை சங்க தலைவர் பி.எம். அழகர்சாமி, பொதுச் செயலாளர் ஏ. கனகசுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். துணைப் பொதுச் செயலா ளர் பி. மகாதேவன் நன்றி கூறினார்.