அரசு போக்குவரத்து ஊழியர்கள் வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டம்
திருச்சிராப்பள்ளி, ஆக.27 - தேர்தல் வாக்குறுதிபடி அனைவருக்கும் பழைய பென்சன் வழங்க வேண்டும். உயிரி ழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதி அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன திருச்சி - கரூர் மண்டலங்கள் சார்பில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், திருச்சி புறநகர் கிளை முன், தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. 9 ஆவது நாளான செவ்வாயன்று, அரசு போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வு பெற்றோர் வாயில் கருப்புத்துணி கட்டிக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஓய்வு பெற்றோர் நல அமைப்பு சந்திரபாபு தலைமை வகித்தார். திருச்சி கரூர் மண்டல தலைவர் சிங்கராயர் துவக்க உரையாற்றினார். போராட்டத்தை விளக்கி டி.என்.எஸ்.டி.சி திருச்சி, கரூர் மண்டலப் பொதுச் செயலா ளர் மாணிக்கம், எஸ்.சி.டி.சி. மாநிலத் தலை வர் அருள்தாஸ், எஸ்.இ.டி.சி ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் ராமதாஸ், சண்முகம், ஜெயராமன், டி.என்.எஸ்.டி.சி ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகிகள் கருணா நிதி, சிவானந்தம் ஆகியோர் பேசினர்.