அரசுப்பள்ளி மாணவர் உயிரிழப்பு தலைமையாசிரியர் இடமாற்றம் நாமக்கல்,
மார்ச் 15- ராசிபுரத்தில் அரசுப்பள்ளியில் மாணவர் உயிரிழந்த சம்பவத்தில், அப்பள்ளியின் தலைமையாசிரியர் உட்பட 2 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் சிவானந்தா சாலை அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த பிப்.26 ஆம் தேதி யன்று, மாணவர்களுக்கு இடையே நடந்த மோதலில் 9 ஆம் வகுப்பு மாணவர் கவின்ராஜ் உயிரிழந்தார். மற்றொரு மாணவர் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர் திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் உத்தரவின் பேரில், மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர் ப.மகேஸ்வரி விசாரணை நடத்தினார். அவரது அறிக்கையின் அடிப்படையில் தலைமையாசிரியர், வகுப்பு ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. இதையடுத்து, அப்பள்ளி யின் தலைமையாசிரியர் வரதராஜன் செல்லப்பம் பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு இடமாற்றம் செய்யப் பட்டார். மேலும், அறிவியல் பாட பட்டதாரி ஆசிரியர் ராஜேந்திரன் சித்தாளந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளிக் கும், தமிழ் பாட பட்டதாரி ஆசிரியர் சோமசுந்தரம், மறுநியமனத்திலிருந்து விடுவிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பிறப் பித்துள்ளார்.
பஞ்சு பாரம் ஏற்றி வந்த லாரியில் தீ விபத்து
வெப்படை அருகே பஞ்சு பாரம் ஏற்றி வந்த லாரி யில் ஏற்பட்ட தீ விபத்தில், லாரி முற்றிலும் எரிந்து சேத மானது. நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஒன்றியம், படைவீடு, சாமுண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வ ராஜ் (53). இவர் தனக்கு சொந்தமான லாரியில் வெப் படை பகுதியில் இயங்கி வரும் தனியார் நூற்பாலை யிலிருந்து பஞ்சு மூட்டைகள் ஏற்றிக்கொண்டு, பாதரை அருகே உள்ள குடோனுக்கு கொண்டு செல்வதற்காக சனியன்று சென்று கொண்டிருந்தார். பாதரை எனும் பகுதி அருகே வந்தபோது, லாரியில் ஏற்றப்பட்டு இருந்த பஞ்சு மூட்டைகள் சாலையின் குறுக்கே சென்ற மின் கம்பியில் உரசியது. இதனால் பஞ்சு மூட்டை தீப்பற்றி எரிந்தது. ஆனால் தீப்பற்றியது தெரியாமல் செல்வராஜ் லாரியை ஓட்டிக்கொண்டு இருந்தார். பின்னால் வந்த வாகன ஓட்டிகள் லாரியில் தீப்பிடித்து எரிகிறது என்று சொன்னதும், பதறிப்போய் அப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தின் அருகே லாரியை நிறுத்தினார். அதற்குள் லாரி முழுவதும் கொழுந்துவிட்டு எரிந்தது. உடனே அவர் கீழே குதித்து உயிர் தப்பினார். இதுகுறித்து தகவலறிந்த வெப்படை தீயணைப்புத் துறையினர், சம்பவ இடத் துக்கு வந்து 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் பஞ்சு மூட்டையுடன் லாரி முழுவதும் எரிந்து சேதமானது. மொத்தம் ரூ.10 லட்சத்திற்கு நஷ்டம் ஏற் பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வெப்படை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
விபத்தில் கணவர் உயிரிழப்பு மனைவி, குழந்தை படுகாயம் சேலம்,
மார்ச் 15- சங்ககிரி பழைய பேருந்து நிலையம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் கணவர் உயிரிழந்த நிலையில், படு காயமடைந்த மனைவி மற்றும் குழந்தை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம், பெரும்பாலை, சமத்தாள் பகுதி யைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அம்சராஜ் (30). இவரது மனைவி சரண்யா (23), மகன் தனுஷ் (2). மூவ ரும் தருமபுரியிலிருந்து திண்டுக்கல் மாவட்டம், கொடை ரோட்டில் சாலையோரம் தள்ளுவண்டியில் சிப்ஸ் வியா பாரம் செய்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். சங்ககிரி பழைய பேருந்து நிலை யம் அருகே சென்றபோது, ஈரோட்டிலிருந்து சேலம் நோக்கி வந்த லாரி, இவர்கள் மீது மோதியது. இதில் அம்சராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த அவரது மனைவியும், குழந்தையும் மீட்கப் பட்டு சங்ககிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். இதுகுறித்து சங்ககிரி காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.