விளையாட்டுத் துறையில் சாதனை ஆர். வைஷாலி உள்ளிட்ட 4 பேருக்கு அரசு வேலை!
சென்னை: விளையாட்டுத் துறையில் சாதனை படைத்த தமிழக வீரர் - வீராங்கனைகள் 4 பேருக்கு அரசுப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். சீனாவின் ஹாங்ஷோவில் நடைபெற்ற 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் 2-ஆவது இடம் பெற்ற சதுரங்க விளையாட்டு வீராங்கனை ஆர். வைஷாலிக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் இளநிலை அலுவ லர் (தரம் III) பணியும், நேபாள நாட்டின் போக்ராவில் நடை பெற்ற 13-ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் முத லிடம் பெற்ற கால்பந்து வீராங்கனை கே. சுமித்ராவுக்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் கணக்காளர் பணியும், கூடைப்பந்து வீராங்கனை எஸ். சத்யாவுக்கு தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தில் மார்க்கெட்டிங் நிர்வாகி பணியும், சீனாவின் ஹாங்ஷோவில் நடைபெற்ற 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற பாய்மர படகு போட்டி வீரர் பி. சித்ரேஷ் தத்தாவுக்கு சிப்காட் நிறுவனத்தில் உதவி அலுவலர் பணியும் வழங்கி அதற்கான நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
