சென்னை, அக்.16- கொரோனா பெருந்தொற்று சிறப்பு தடுப்பூசி முகாம் விடுமுறை நாட்களில் நடத்துவதால் ஊழியர்கள் பல்வேறு சிரமங்களை சந்திக்கின்றனர். இந்த சிரமங்களை போக்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது. சங்கத்தின் மாநிலத் தலைவர் மு. அன்பரசு, மாநிலப் பொதுச்செயலாளர் ஆ.செல்வம் ஆகியோர் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள மனு வருமாறு: தமிழகம் முழுவதும் கடந்த மூன்று ஞாயிற்றுக்கிழமைகளில் மேற் கொள்ளப்பட்டுவரும் மெகா தடுப்பூசி முகாம்களில் 18 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அனைவ ரையும் தடுப்பூசி செலுத்திட சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதனால் தற்பொழுது கொரோனா தொற்று வெகுவாக குறைந்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்த சிறப்பு முகாம் நடத்தப்படும்போது மருத்து வத்துறை ஊழியர்கள், பொது சுகாதா ரத்துறை ஊழியர்கள், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சி, நக ராட்சி, மாநகராட்சி என்று பல்வேறு துறை ஊழியர்கள் இப்பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த கொரோனா சிறப்பு முகாமில் பணி புரியக்கூடிய ஊழியர்கள் பல்வேறு வித மான சிரமங்களை சந்தித்து, நிம்மதி யற்ற முறையில் பணியாற்றிக்கொண்டி ருக்கிறார்கள். அவர்களின் சிரமங்களை தவிர்க்க கீழ்க்கண்ட கோரிக்கைகளை தங்க ளின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம். கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்க ளில் பணி மேற்கொள்ளும் அனைத்துத் துறை ஊழியர்களுக்கும் வாரத்தில் ஒரு நாள் விடுப்பு வழங்கிட வேண்டும். மருத்து வத்துறை, பொது சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்களுக்கு அடிக்கடி ஆய்வுக் கூட்டம் நடத்தப்படுவதால் விடுப்புகள் எடுக்க இயலவில்லை. எனவே சிறப்பு முகாமிற்கு அடுத்த நாள் விடுப்பு என அறிவித்து அன்று ஆய்வுக் கூட்டம் நடத்துவதை தவிர்க்க வேண்டும். சிறப்பு முகாம்களில் பணி மேற் கொள்வதால் ஏற்கனவே துறை ரீதியான பணிகளில் பாதிப்பு ஏற்படுகிறது. ஞாயிற்றுக் கிழமை சிறப்பு முகாம் நடத்திய நிலையில் அடுத்த நாள் திங்கள் கிழமை மாவட்ட தலைநகரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் நடப்பதால் அதிலும் பங்கேற்பதில் ஊழி யர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி றார்கள். குறிப்பாக சமூக பாதுகாப்புப் பணி, முதலமைச்சர் சிறப்பு முகாம் மனுக்கள், பயனாளிகள் பங்கேற்புடன் மேற்கொள்ளப் பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளை விரைந்து முடிப்பதற்கு இலக்கு நிர்ணயம் செய்து அவசரமாக அறிக்கை கேட்கப்படு கின்றது,
இதனால் இரண்டு பணிகளையும் சேர்த்து பார்ப்பதில் ஊழியர்களுக்கு மிகுந்த மன உளைச்சலையும் சோர்வை யும் ஏற்படுத்தியுள்ளது. இவை உடன் தவிர்க்கப்பட வேண்டும். தடுப்பூசி முகாம் நடத்தப்படும்போது உரிய நிதி ஒதுக்கீடு செய்யாமல் முகாம் நடத்த ஒரு குறிப்பிட்ட துறையை செய்ய நிர்ப்பந்தப்படுத்துவது (உ.ம். ஊரக வளர்ச்சித்துறை) இதை தவிர்த்து தமிழக அரசு உரிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பொது சுகாதாரத்துறையில், முகாமில் பங்கேற்கும் ஊழியர்களுக்கு தடுப்பூசி விடுமுறை வழங்குவது போல் மற்ற துறை ஊழியர்களுக்கும் வழங்கிட வேண்டும். தடுப்பூசி முகாம் நேரம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை என குறிப்பிட்டிருந்தாலும் தடுப்பு மருந்து காலியான பின்புதான் கிராமங்களிலிருந்து புறப்பட வேண்டும் என கூறப்படுவதால் போதுமான வாகன வசதி இல்லாத சூழ்நிலையில் முகாம் முடிந்து வீடு திரும்ப வெகுநேரம் ஆகிவிடுகிறது. குறிப்பாக பெண் ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள். பொது சுகாதாரத்துறையில் ஞாயிற்றுக் கிழமை தவிர்த்து வார நாட்களிலும் சிறப்பு முகாமிற்கு இணையாக தடுப்பூசி போடும் முகாம்கள் நடத்தப்படுவதால் ஊழி யர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. எனவே, கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் பணி மேற்கொள்ளும் அனைத்துத்துறை ஊழியர்களும் அர்ப்ப ணிப்புணர்வுடன் செயலாற்றி வருகிறார் கள். அவ்வூழியர்களின் மேற்கண்ட சிரமங்க ளை தமிழக அரசு உடன் பரிசீலித்து தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர். இந்த மனு, மருத்துவம் -மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர், அரசின் தலை மைச் செயலாளர், மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர் ஆகியோ ருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.