அறந்தாங்கி, அக்.29 - புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரிய நகராட்சியாக அறந்தாங்கி உள்ளது. அறந்தாங்கியை சுற்றி 300-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அறந்தாங்கி - பேராவூரணி சாலையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை சந்தை நடைபெறுவது வழக்கம். இச்சந்தையின் போது ஆடு, மீன், காய்கறிகள் வாங்க அறந்தாங்கி சுற்று வட்டாரப் பகுதியில் இருந்து ஏராளமா னோர் வருவர். இந்நிலையில், அக்.31 அன்று தீபாவளி பண்டிகை என்பதால் செவ்வா யன்று நடந்த சந்தையில், அதிகாலை யிலேயே மாவட்டத்தின் பல்வேறு பகுதி யில் இருந்தும், பிற மாவட்டங்களி லிருந்தும் வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏராள மானோர் ஆடுகளை கிலோ கணக்கில் வாங்கிய நிலையில், செவ்வாயன்று மட்டும் அறந்தாங்கி ஆட்டுச் சந்தை யில் ஒரு கோடி ரூபாய்க்கு ஆடு விற்பனை நடைபெற்று உள்ளதாக ஆட்டு வியாபாரிகள் தெரிவித்தனர். இதேபோல் கோழிகளும் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டன.