tamilnadu

img

உலகளவில் தீவிரமடைந்த உணவுப் பற்றாக்குறை

உலகளவில் தீவிரமடைந்த உணவுப் பற்றாக்குறை

ஐ.நா. கவலை

நியூயார்க், மே 17- உலகளாவிய உணவுப் பற்றாக் குறை ஊட்டச்சத்து குறைபாடு தீவிர மடைந்துள்ளது என ஐ.நா. உணவு மற்றும்  வேளாண்மை அமைப்பும் அதன் இணை  அமைப்புகள் இணைந்து வெளியிட்ட “2025 உலக உணவு நெருக்கடி” என்ற  புதிய அறிக்கையில் தெரிய வந்துள்ளது.  2024-ஆம் ஆண்டு 53 நாடுகளில் சுமார்  29.5 கோடி மக்கள் கடுமையான பட்டினி யால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவ்வ றிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையானது 2023- ஆம் ஆண்டைவிட 1.37 கோடி அதிகம், என வும்; மேலும், இதுதொடர்ந்து ஆறாவது ஆண்டாக ஏற்கெனவே வறுமை, பஞ்சத்  தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் உணவுப் பற்றாக்குறையை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது எனவும் அறிக்கை தெரிவித்துள்ளது.  ஐ.நா அவை பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் இந்த எண் ணிக்கையைக் குறிப்பிட்டு, “உலகம் தவ றான திசையில் செல்வதை காட்டுகிறது” என்று தெரிவித்துள்ளார். மேலும், “பட்டினி மற்றும் ஊட்டச் சத்துக் குறைபாடானது நாம் சரி செய்ய முயற்சிக்கும் வேகத்தை விட - திறனை விட வேகமாக அதிகரித்து வருகிறது. ஆனால் அதே நேரத்தில் உலகளவில் உற்பத்தி செய்யப்படும் மூன்றில் ஒரு பங்கு உணவு வீணாகிறது அல்லது கழி வாக தூக்கி வீசப்படுகிறது” என வேதனை  தெரிவித்துள்ளார். “போர்கள், பொருளாதார நெருக்கடி கள் (அதிர்ச்சிகள்), காலநிலை மாற்றம்  போன்ற காரணங்களாலும் முக்கியமான  மனிதாபிமான நிதி உதவிகள் குறைந்து விட்டதாலும் நீண்டகாலமாக உள்ள  நெருக்கடிகள் இன்னும் மோசமடை கின்றன. போர்களே பல பகுதிகளில் உணவு நெருக்கடிக்கு முதன்மை காரண மாக உள்ளது” என ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் கிராமப்புறங்களில் கடுமை யான உணவு பற்றாக்குறை ஒரு நிரந்தர  பிரச்சனையாக மாறி வருகிறது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.