சென்னை,டிச.28- சென்னை கோட்டூர்புரத்தில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்க ளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி செவ்வாயன்று(டிச.28) ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றார். அப்போது கூறுiயில், “பழைய பள்ளிக் கட்டிடங்களைக் கண்டறிதல், பள்ளியில் நடக்கும் பாலியல் துன்புறுத் தல்களைத் தடுப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. ஒவ்வொரு பள்ளியி லும் புகார் பெட்டி வைக்க கல்வியாளர்க ளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார். பள்ளியில் நடக்கும் பாலியல் துன் புறுத்தல்களை 14417 என்ற புகார் எண்ணில் மாணவர்கள் தெரிவிக்கலாம். பழைய கட்டிடங்கள் உள்ள 1,600 பள்ளிகள் அடை யாளம் காணப்பட்டுள்ளன. பள்ளிகளில் பழைய கட்டிடங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் கடைசி வாரத்திலோ அல்லது மே முதல் வாரத்திலோ பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும்” என்று அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.