tamilnadu

img

1982 ஜனவரி 19 அன்று நடைபெற்ற நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டம்

1982 ஜனவரி 19 அன்று நடைபெற்ற நாடு தழுவிய பொது வேலைநிறுத்தப் போராட்டத்தின்போது தமிழகத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் திருமெய்ஞானத்தைச் சேர்ந்த அஞ்சான், நாகூரான் ஆகியோர் உயிரிழந்தனர். திருமெய்ஞானம் தியாகிகளின் 40ஆம் ஆண்டு நினைவு தினம் மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே உள்ள திருமெய்ஞானத்தில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகைமாலி, எம்.சின்னதுரை மற்றும் மாவட்டச் செயலாளர்கள், சிஐடியு தலைவர்கள் பங்கேற்றனர்.  (செய்தி : 8)