tamilnadu

img

ஐஎம்எப் துணை இயக்குநராக கீதா கோபிநாத் நியமனம்

வாஷிங்டன், டிச.3- சர்வதேச நாணய நிதியம் அமெரிக்காவின் வாஷிங்ட னை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரு கிறது. ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளியல் வல்லுநராக இந்திய வம்சா வளியைச் சேர்ந்த கீதா கோபி நாத் செயல்பட்டு வருகிறார். அமெரிக்க வாழ் இந்தியரான கீதா கோபிநாத் கர்நாடகத் தின் மைசூரில் பிறந்தவர்.

 இந்த நிலையில், சர்வ தேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குன ராக கீதா கோபிநாத் நியமிக் கப்பட்டுள்ளார். தற்போது, அந்த அமைப்பின் துணை நிர்வாக இயக்குனராக உள்ள ஜெப்ரி ஒஹமொடோவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடி வடைய உள்ளது. இதைத் தொடர்ந்து அந்தப் பதவிக்கு கீதா கோபிநாத் நியமிக்கப் பட்டுள்ளார். தற்போது, சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனராக கிறிஸ்டலினா ஜார்ஜிவா செயல்பட்டு வரும் நிலையில் துணை நிர் வாக இயக்குநராக கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள் ளார். இதன் மூலம், சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் துணை நிர்வாக இயக்குநர் ஆகிய இரு உயர்பதவிகளிலும் பெண்கள் பணியாற்றுவது இதுவே முதல்முறையாகும்.

;