சென்னை,ஜன.24- கடலூர் மாவட்டம் சிதம்பரம் கீரப்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட செங்கல்மேடு கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் ஜி.கலியபெருமாள் (வயது 88) அவர்கள் காலமானார். அவரது மறைவுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார். கம்யூனிஸ்ட் செயல்வீரர்கள் பற்றி ஜி.ராமகிருஷ்ணன் எழுதி வரும் “களப்பணியில் கம்யூனிஸ்டுகள் “ பகுதியில் தோழர் ஜி.கலியபெருமாள் குறித்தும் எழுதியுள்ளார்.