சென்னை, பிப்.13 - தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளை பாதுகாக்க திமுக கூட்டணி கட்சி வேட் பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன் வாக்காளர்க ளுக்கு வேண்டுகோள் விடுத்தார். மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணியில் சென்னை மாநகராட்சி 98ஆவது வார்டில் போட் டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆ.பிரியதர்ஷினியை ஆதரித்து ஜி.ராம கிருஷ்ணன் பிரச்சாரம் செய்தபோது பேசியதாவது: 1992ஆம் ஆண்டு, 73, 74வது சட்டப்பிரிவில் திருத்தம் செய்து, புதிய ஊராட்சி, நகராட்சி அமைக் கப்பட்டது. சட்டத்தின் அடிப்படையில் சட்டமன்றம், நாடாளுமன்றத்திற்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது போல், நகர்ப்புற உள்ளா ட்சித் தேர்தலும் நடைபெற வேண்டும். கடந்த 2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தியதா? இல்லை. இது ஜனநாயக விரோத செயலாகும். மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள், நகராட்சி, ஊராட்சி தலைவர்கள், மேயர்களுக்கு பதிலாக அதிகாரிகளின் நிர்வா கம்தான் நடைபெற்றது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தால் உள்ளாட்சி தேர் தல் நடைபெறும் என்று வாக்குறுதி அளித்ததின் அடிப்படையில் தற்போது உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. ஏனென்றால் உள்ளாட்சி அமைப்புகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வர்க ளால்தான் நேரடியாக அன்றாடம் மக்களுடன் தொடர்பு கொண்டு அவர்க ளது பிரச்சனைகளை தீர்க்க முடியும்.
நீட் தேர்வால் தமிழக மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஜி. எஸ்.டி. வரியால் மாநிலத் தின் வருவாய் பாதிக்கப்பட் டிருக்கிறது. தமிழகத்தை பாதுகாக்க நீங்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித் தீர்கள். தமிழகத்தை மட்டும் பாதுகாத்தால் போதுமா? உள்ளாட்சி அமைப்புகளையும் பாது காக்க வேண்டாமா? என கேள்வி எழுப்பினார். எனவே மக்கள் விரோத அதிமுக, பாஜகவை தோற்கடிக்கவும், மாநிலத்தில் உள்ளாட்சி அமைப்புகளை பாதுகாக்க வும், மக்களின் வரிப்பணம் வீணாகாமல் தடுக்க 98ஆ வது வார்டில் போட்டியிடும் பிரியதர்ஷினிக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திர சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். அதேபோல் பிற பகுதிகளில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் களுக்கு அவரவர் சின்னத்தி லும் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் இவ்வாறு அவர் பேசி னார். இந்த பிரச்சார கூட்டத்தில் வில்லிவாக்கம் திமுக சட்ட மன்ற உறுப்பினர் வெற்றி அழகன், சிபிஎம் மத்திய சென்னை மாவட்டச் செய லாளர் ஜி.செல்வா, திமுக வட்டச் செயலாளர்கள் காஞ்சி சே.துரை, கே.பாஸ் கர், முனுசாமி தாஸ், பாக்கி யராஜ் (காங்கிரஸ்), ஏ.டேனி யல் (விசிக), பா.தாம்சன் (மதிமுக), மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சர்வேஸ்வரன், எஸ்.கே. முருகேஷ், சி,திருவேட்டை, வெ.தனலட்சுமி, எஸ்.சிவசுப்பிரமணியம், சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.சந்திரன், பகுதிச் செயலாளர் அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.