tamilnadu

img

வாச்சாத்தி மக்களுக்கு மார்க்சிஸ்ட் கட்சி என்றும் துணை நிற்கும்: ஜி.ராமகிருஷ்ணன்

தருமபுரி, நவ.5- வாச்சாத்தி மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மும் என்றும் துணை நிற்கும் என சிபி எம் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார். தருமபுரி மாவட்டம், வாச்சாத்தி கிராமத்திற்கு ஞாயிறன்று சென்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணனுக்கு, அப்பகுதி மக்கள் ஆரத்தி எடுத்து, உற்சாக வர வேற்பு அளித்தனர். 30  ஆண்டுகளுக்கு முன்பு கொடூர சம்பவம் நடைபெற்ற பகுதிகளை ஜி.ராமகிருஷ்ணன் பார்வையிட்டார். இதன்பின் அப்பகுதி பொதுமக்களிடம் கலந்துரையாடினார்.  அப்போது அவர் பேசுகையில், 31 ஆண்டுகள் கழித்து வாச்சாத்தி  மக்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்து ள்ளது. தீர்ப்பில் கூறியுள்ளபடி பாதி க்கப்பட்ட மக்களுக்கு கிடைக்க வேண்டிய நிவாரணம், அரசு வேலை, வீடு, நிலம் மற்றும் அடிப்படை வச திகள் கிடைக்க மாவட்ட நிர்வாகத்திட மும், தமிழக முதல்வரை சந்தித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. வாச்சாத்தி மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கமும் என்றும் துணை நிற்கும் என, அம்மக்களிடம் உறுதியளித்தார். இந்நிகழ்வில் கட்சியின் மாநி லக்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன், மூத்த தலைவர் பி.இளம்பரிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சோ.அருச்சு ணன், அரூர் ஒன்றிய செயலாளர் பி.குமார், மலைவாழ் மக்கள் சங்க  பொறுப்பாளர்கள் எஸ்.கே.கோவிந் தன், பி.வி.மாது ஆகியோர் உட னிருந்தனர்.