tamilnadu

img

தீக்கதிர் விரைவு செய்திகள்

கடலூரில் அகில இந்திய மாநாட்டு நிதியளிப்பு'

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டு நிதியாக, கட்சியின் கடலூர் மாவட்டக்குழு சார்பில், மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணனிடம், 3-ஆவது தவணை நிதியாக ரூ. 7 லட்சத்திற்கான காசோலையை மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் வழங்கினார். கடலூர் மாவட்டக்குழு சார்பில் இதுவரை ரூ. 17 லட்சம் நிதி அளிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் மாநிலக் குழு உறுப்பினர்கள் எஸ்.ஜி. ரமேஷ் பாபு, பி. ஜான்சிராணி, திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன், தமுஎகச மாநில செயற்குழு உறுப்பினர் களப்பிரான், சிபிஎம் கடலூர் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் வி. உதயகுமார், பி. கருப்பையன், ஜே. ராஜேஷ் கண்ணன்,  பி. வாஞ்சிநாதன், எஸ். பிரகாஷ், பி. தேன்மொழி, ஆர். அமர்நாத், மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.கே. பக்கிரான் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

மின்சாரம் தட்டுப்பாடு இல்லை!

கோயம்புத்தூர், மார்ச் 22- தமிழ்நாட்டில் புதிதாக 7000  தெர்மல் பிளாண்ட் மூலம், 14  ஆயிரம் மெகாவாட் மின்சார  உற்பத்தி, 2000 பேட்டரி மின்சா ரம் உற்பத்தி செய்யப்பட உள்  ளது. புதிய திட்டங்களை செயல்  படுத்த தீவிரமான நடவடிக்கை களை எடுத்து வருவதால் விரை வில் மின் உற்பத்தியில் தன்னி றைவு பெற்ற மாநிலமாக தமிழ்  நாடு மாறும் என்றும் தற்போது  மின்சாரம் தட்டுப்பாடு கிடை யாது என்றும் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

ரம்ஜான் பண்டிகைக்கு  சிறப்பு ரயில் இயக்கம்

சென்னை, மார்ச் 22- ரம்ஜான் பண்டிகையையொட்டி மார்ச் 28 அன்று, தாம்பரம் - கன்னியா குமரி இடையே சிறப்பு ரயில் இயக் கப்படும் என தெற்கு ரயில்வே அறி வித்துள்ளது. அதன்படி, தாம்பரம் -  கன்னியாகுமரி சிறப்பு ரயில் மாலை  6 மணிக்கு தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு  கன்னியாகுமரி சென்றடையும். மறு  மார்க்கத்தில், மார்ச் 31ஆம் தேதி  இரவு 8.30 மணிக்கு கன்னியாகுமரி யில் இருந்து சிறப்பு ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 8.55 மணிக்கு தாம்பரம் வந்தடையும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.

அரபிக்கடல் பகுதியில்  4.2 ரிக்டர் நிலநடுக்கம்

 புதுதில்லி, மார்ச் 22- அரபிக்கடல் பகுதியில் சனிக்கிழமை யன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற் பட்டது.  காலை 10.55 மணியளவில் ஏற்பட்ட  இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு  மையம் தெரிவித்துள்ளது. 15 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 25.09 டிகிரி வடக்கு அட்ச ரேகையிலும், 65.36 டிகிரி கிழக்கு தீர்க்க ரேகையிலும் இருக்கும் என முதலில்  தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளி யாகவில்லை.