ஆமைகள் முதல் பழ ஈக்கள் வரை, நாடோடி மீன்கள் முதல் எண்ணற்ற பல உயிரினங்கள் வரை, ஐந்து பங்கு வலசை மீன்கள், பறவைகள், விலங்குகள் போன்றவை மாசு படுதல், ஆக்ரமிப்பு உயிரினங்க ளின் பரவல் மற்றும் காலநிலை மாற்றத்தால் அழியும் ஆபத்தில் உள்ளன என்று இது பற்றி நடந்த ஐநாவின் முதல் ஆய்வறிக்கை கூறு கிறது. முதுகு கோணல் திமிங்கலங் கள் முதல் டால்மேஷன் கூழைக் கடாக்கள் (Dalmatian pelicans) வரை ஒவ்வொரு ஆண்டும் பில்லி யன் கணக்கான உயிரினங்கள் குறிப்பிட்ட வெவ்வேறு பருவங்க ளில் கடல் , நிலம் மற்றும் வான் வழி யாக வலசை செல்கின்றன. கடல் ஆமைகளில் மிக அழ கான, எர்த்மாச்சிலிஸ் இம்ப்ரிகாடா (Ertmochelys Imbricata) என்ற அறிவியல் பெயருடைய, தவிட்டு நிறத்தில் மஞ்சள் புள்ளிகளுடன் கூடிய மேலோடு மற்றும் சிப்பி களை உடைத்து உண்ண உத வும் பருந்தின் அலகுபோன்ற உதடு களுடன், ஒரு மீட்டர் நீளம்வரை வளரும் தன்மையுடைய அழுங் காமை (Hawksbill), ஸ்டெர்ஜி யான்கள் (Sturgeons) எனப்படும் சுறா வடிவுடைய இன்னுணவு மீன், பழ வௌவால்கள் வரை அழியும் ஆபத்தில் உள்ளன என்று ஐநா அறிக்கை கூறுகிறது.
ஆனால் மனிதர்கள் ஏற்படுத் தும் மாசு, ஆக்ரமிப்பு உயிரி னங்களின் பரவல் மற்றும் கால நிலை மாற்றத்தால் இவற்றில் பல மறைந்துவிடும் ஆபத்தில் உள்ளன என்று வலசை செல்லும் வன உயி ரினங்களின் பாதுகாப்பிற்கான உடன்படிக்கை அமைப்பின் (the convention on migratory species cms) புதிய ஆய்வறிக்கை கூறுகிறது. இது பான் (Bonn) உடன்படிக்கை என்றும் அறி யப்படுகிறது. இந்த ஒப்பந்தத் தின்படி பாதுகாக்கப்படும் 1189 உயிரினங்களில் 22% அழியும் ஆபத்தில் உள்ளன. 44% உயிரினங்கள் நிலையாக வாழமுடியாத அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வாழிட இழப்பால் எண்ணிக்கையில் குறைந்து வருகின்றன. இவற்றில் உலகில் இன்று வாழும் 97% சுறாக்கள், கதிர் மீன்கள், சுறா வடிவுடைய மீன்கள் போன்றவை விரைவில் அழியும் நிலையில் உள்ள உயிரினங்கள். 1970கள் முதல் வாழிட இழப் பால் இவற்றின் எண்ணிக்கையில் 90% சரிவு ஏற்பட்டுள்ளது. வன உயிரினங்கள் இடம் விட்டு இடம் செல்லும்போது பெரும் தொலைவு பயணம் செய்கின்றன. ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட காட்டெருமைகள் (wildebeest) டான்ஜானியா செரங்கட்டி (Serengeti) சரணாலயத்தில் இருந்து கென்யா மாசய்மாறா (Maasai Mara) பூங்காவிற்கு வந்து செல்லும் வருடாந்திர வலசைப் பயணத்தையும் பசிபிக் சால்மன் (Pacific salmon) மீன் கள் இனப்பெருக்கம் செய்து முட்டையிட யுஎஸ் மேற்குக்கரை ஆற்றுப்பகுதிக்கு இடம்பெயர்ந்து வருவதையும் போன்ற அதிச யிக்கவைக்கும் இயற்கையின் மகத்தான பயணங்கள் அடங்கும். இப்பயணங்கள் தொடர்கின்றன. இந்த பட்டியலில் உள்ள கொரில்லாக்கள், அனைத்து வகை யான ஆமைகள் அழியும் ஆபத்தில் உள்ளன. ஆண்டுதோறும் வழி யில் எங்கும் இடை நிற்காமல் அலாச்கா முதல் எட்டாயிரம் மைல்களுக்கும் கூடுதலான தொலைவிற்கு ஆஸ்திரேலியா வரை பறந்து வந்து செல்லும். பார் வால் காட் விட்ஸ் (bar-tailed godwits) பறவைகள், பாலூட்டி களில் மிக அதிக தூரத்திற்கு ஆப்பி ரிக்காவின் குறுக்கே வலசை செல்லும் வைக்கோல் நிறப் பழ வௌவால்கள் (Straw coloured fruit bat), அழிவை நேரிடும் ஐரோப்பிய ஈல் (eel) மீன்கள் போன்றவற்றின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவருகிறது. பாதுகாக்கப்பட வேண்டிய வலசை வழிகள் உலக வலசை உயிரினங் களை சிறந்தமுறையில் பாதுகாப் பது தொடர்பாக சமீபத்தில் உஸ்பெஸ்கிஸ்தானின் சாமர் கண்ட் நகரில் நடந்த மாநாட்டில் இந்த விவரங்கள் வெளியிடப் பட்டன.” ஆபத்தில் உள்ளதா லேயே இந்த உயிரினங்கள் பாது காக்கப்படவேண்டியவற்றின் பட்டி யலில் உள்ளன. இந்த போக்கு உலகளவில் காணப்படுகிறது. இவற்றில் மூன்றில் ஒன்று வாழிட இழப்பால் பாதிக்கப்பட்டுள்ளன.
பத்தில் ஏழு உயிரினங்கள் நஞ்சு வைத்து கொல்லப்படுதல், வேட்டையாடுதல், தவறாகப் பிடிக்கப்படுதல் போன்ற மித மிஞ்சிய பயன்பாட்டால் அழி கின்றன. திமிங்கலங்கள், சிங்கங் கள், கொரில்லாக்கள், ஒட்டகச் சிவிங்கிகள் மற்றும் பல பறவை கள் வலசை உயிரினங்களே என்பதை மக்கள் உணர்வதில்லை. இவற்றை பாதுகாக்கவேண்டும் என்ற விழிப்புணர்வை இந்த அறிக்கை ஏற்படுத்துகிறது” என்று சி எம் எஸ் அமைப்பின் செயல் இயக்குனர் எய்மி ஃப்ரிங்க்கெல் (Amy Fraenkel) கூறுகிறார். இந்த உயிரினங்கள் வலசை செல்லும் முக்கிய நெடுஞ்சாலை கள், நீச்சல் வழிகள், வனப்பாதை களில் மனித கட்டுமானங்கள் குறைக்கப்படவேண்டும்.
இவற் றின் வலசை வழிகள் பாதுகாக்க தீவிர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். கடந்த முப்பதாண்டில் எகிப்திய வல்லூறுகள், ஸ்டெப் கழுகுகள், காட்டு ஒட்டகங்கள் போன்ற பட்டியலில் உள்ள 70 உயி ரினங்களின் எண்ணிக்கை வெகு வாகக் குறைந்துள்ளது. சிஎம்எஸ் பட்டியலில் இடம்பெறாத 399 உயி ரினங்கள் பாதுகாக்கப்பட வேண்டிய அவசரநிலையில் உள் ளன. விவசாயத்திற்காக வாழி டங்களை அழித்தல், நகர்மயமா தல், சாலைகள், இரயில் பாதை கள், வேலிகளின் நிர்மானம் போன்றவற்றை கொண்ட சூழல் மண்டல ஒருங்கிணைப்பு நடை முறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஆய்வுக்குழுவினர் கூறு கின்றனர். இனப்பெருக்கம் செய்ய, உணவூட்ட, பயணிக்க இவ்வு யிரினங்களுக்கு இடவசதி அவசி யம். இந்த இடங்களை சுலபமாக உயிரினங்கள் சென்றடைய முடி யாதபோது அல்லது அத்தகை யவை முற்றிலும் இல்லாமல் செய் யப்படும்போது அந்த உயிரி னங்கள் மட்டும் அழிவதில்லை. மனித குல அழிவிற்கான சவப் பெட்டியில் மேலும் ஒரு ஆணி அடிக்கப்படுகிறது என்பதையே அதுஎடுத்துக்காட்டுகிறது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.