ஆப்பிரிக்க நாடான மாலியில் அரசு எதிரான குழுக்க ளுடன் நடந்த மோதலில் பிரான்ஸ் நாட்டுப் படைவீரர் ஒருவர் கொல்லப்பட்டிருக்கிறார். மாலியில் உள்ள ராணுவ ஆட்சிக்கு ஆதரவாக பிரான்ஸ் படை அங்கு நிறுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸ் படை அங்கு அனுப்பப்பட்டதிலிருந்து இதுவரையில் 53 பிரான்ஸ் படைவீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ராணுவ ஆட்சிக்கு ஆதரவாக அங்கு படைகள் நிறுத்தப்பட்டுள்ளது தொடர வேண்டுமா என்ற விவாதம் நடைபெற்று வருகையில் இந்தக் கொலை நடைபெற்றுள்ளது.
ஆர்மீனியாவின் ஜனாதிபதி ஆர்மென் சர்கிசியன் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். நாடு நெருக்கடியில் இருக்கையில் தனது பதவியைக் கொண்டு கொள்கை ரீதியான தலையீடுகள் எதுவும் செய்ய இயலவில்லை என்று கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த முடிவு உணர்வு பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவு கிடையாது. நாடு நெருக்கடியில் இருக்கும் போது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைக ளில் தலையிடும் வகையில் நாட்டின் ஜனாதிபதியின் கைகளில் எதுவும் இல்லை என்று கூறியுள்ளார்.
கொரோனா 19 பாதிப்புகள் துவங்கியதில் இருந்து ஒரு சிறு நாடு எந்தவிதப் பாதிப்பையும் எதிர் கொள்ளாமல் இருந்து வந்தது. பசிபிக் கடலில் இருக்கும் தீவு நாடான கிரிபாட்டி, முதன்முறையாக 24 மணிநேர ஊரடங்கை அறிவித்திருக்கிறது. பிஜியில் இருந்து வந்த விமானம் ஒன்றில் பயணித்தவர்களுக்கு பரிசோதனை நடத்தியபோது அவர்களில் 36 பேருக்கு தொற்று இருந் திருக்கிறது. நீண்ட நாட்களுக்குப்பிறகு கிரிபாட்டி வந்த முதல் விமானத்திலேயே இவ்வளவு தொற்று இருந்த தால், பரவலைத் தடுக்க ஊரடங்குஅறிவிக்கப்பட்டிருக்கிறது.