சென்னை, ஏப்.10- சட்டப்பேரவையில் திங்களன்று (ஏப்.10) ஆளுநர் செயல்பாடு குறித்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய அவை முன்னவரும் மூத்த அமைச்ச ருமான துரைமுருகன், ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவிற்கு ஆளுநர் அழைத்ததன் பேரில் சென்றோம். அப்போது அங்கு வந்திருந்த கும்பலை பார்த்தபோது ஆளுநர் யார்? அவர் எந்த கூட்டத்தை சேர்ந்தவர் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது என்றார். தொடர்ந்து பேசிய அவர், சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகள் என்று ஒரு படத்தை காண்பித்தார்கள். அதில் சாவர்க்கர் திரும்பத் திரும்ப வரு கிறார். ஆனால் காந்தி,நேரு காட்சிகள் இடம்பெறவே இல்லை. அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் அப்பாவு, அவர்களுக்கு ‘கோட்சே’தான் தலைவர் என்றார். அப்போது சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது. தொடர்ந்து பேசிய துரைமுருகன், காந்தி இல்லாமல் சுதந்திரமா? என்று கேள்வி எழுப்பினார். பாஜக உங்களுக்கு பிடித்திருந்தால், அந்த கட்சியில் போய் சேர்ந்து கொள்ளுங் கள் என்று கூறிய அமைச்சர் ஆளுநருக்கு இருக்க வேண்டிய அழகு அவரிடம் இல்லை என்றும் இதற்கு மேலும் ஆளுநர் ரவியை விட்டுவைக்க முடியாது என்று ஆவேசமாக பேசினார்.