tamilnadu

img

காவல்துறையால் அடித்துக்கொலை இளைஞர் அஜித்குமார் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா- சகோதரருக்கு அரசு வேலை உத்தரவு

காவல்துறையால் அடித்துக்கொலை இளைஞர் அஜித்குமார் குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா- சகோதரருக்கு அரசு வேலை உத்தரவு

கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன்  நேரில் வழங்கினார்


சிவகங்கை, ஜூலை 3-  சிவகங்கை மாவட்டம் திருப்புவ னம் தாலுகா மடப்புரம் கோவிலில் காவலாளி அஜித்குமார் என்ற இளைஞரை காவல்துறையினர் விசார ணைக்கு அழைத்துச்சென்று,  அடித்துக் கொலை செய்தனர். பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் 5  காவலர்கள் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டனர். போலீஸ் எஸ்.பி.காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். போலீஸ் டிஎஸ்பி யை பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இச்சம்பவம் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அஜித்குமாரின்  குடும்பத்தாரிடம் அலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு, தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வ தாகவும், அக்குடும்பத்திற்கு தேவை யான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாகவும் தெரிவித்தார்.  அதனைத்தொடர்ந்து,  தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க, கூட்டுறவுத்துறை அமைச்சர்     கே.ஆர்.பெரியகருப்பன் ஜூன் 2 அன்று  அஜித்குமார்  சகோதரருக்கு பணி நியமன ஆணையினையும் அக்குடும்பத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டாவிற்கான ஆணையினையும் ஜூன் 2 அன்று நேரில் சென்று வழங்கினார்.  சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர்  கா.பொற்கொடி, மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்  ஆ.தமிழரசி ரவிக்குமார் ஆகியோர் முன்னிலையில்  அஜித்குமார் சகோதரர் நவீன்குமார் (வயது 27) என்பவருக்கு சிவகங்கை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம் லிட், காரைக்குடி டெக்னீசியன் பணியிடத்திற்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கினார். மேலும், தேளி வருவாய் கிராமத்  திற்குட்பட்ட  புல எண். 40-11-ன் படி 0.01.20 ஏர்ஸ் (3சென்ட்) பரப்பளவில், அஜித்குமார் தாயார்     மாலதிக்கு  வீட்டுமனை பட்டாவிற்கான ஆணை யினையும் வழங்கினார்.  கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பன் தனது சொந்த பணத்தில் ரூ.5 லட்சம் அஜித் குடும்பத்தினரிடம் வழங்கினார். இந்நிகழ்வில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் விஜயகுமார், திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், திருப்புவனம் வட்டாட்சியர் ‌விஜயகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.