tamilnadu

img

மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மதிப்பீட்டு மருத்துவ முகாம்

மதுரை, மார்ச் 1- மதுரை மாவட்டம் ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ் மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிர்கள் சிரமமின்றி உதவி உபகரணங்கள் பெற இலவச மதிப் பீட்டு மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் மரு.எஸ்.அனீஷ் சேகர் துவக்கி வைத்தார் .  மதுரை மாவட்டம் , ஒத்தக்கடை அருகே உள்ள உலகனேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் செவ்வாயன்று இலவச மதிப்பீட்டு மருத்துவ முகாமினை துவக்கி வைத் தார். மேலும் , மாவட்ட ஆட்சித்தலை வர் தெரிவிக்கையில், தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நல னுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது .  குறிப்பாக, மாற்றுத்திறனாளி களுக்கு மாதாந் திர பராமரிப்பு உதவித்தொகை வழங்குதல் , உதவி உபகரணங்கள் வழங்குதல் , கல்வி உதவித்தொகை , சுய தொழில் தொடங்க கடனுதவி வழங்குதல் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன . அந்த வகையில் ,ஒன்றிய அரசின் கீழ் இயங்கி வரும் செயற்கை அவை யங்கள் தயாரிப்பு கழகம் ( ALIMCO) மற்றும் தமிழ்நாடு அரசின் ஒருங்கி ணைந்த பள்ளிக்கல்வித் திட்டம் ஒருங்கிணைந்து மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவ / மாணவி யர்கள் சிரமமின்றி உதவி உபகர ணங்கள் பெற்று பயனடைய ஏது வாக இலவச மதிப்பீட்டு மருத்துவ முகாம் நடத்தப்படுகின்றது . மதுரை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின்கீழ் செயல்பட்டு வரும் 15 வட்டார வள  மையங்களில் மொத்தம் 5215 குழந்தைகள் பயன்பெற்று வருகின்ற னர். இதில் , 4587 குழந்தைகள் பள்ளிகளிலும் , 300 குழந்தைகள் முன் ஆயத்தப்பயிற்சி மையங்க ளிலும் , 328 குழந்தைகள் வீடு சார்ந்த பயிற்சி மையங்களிலும் பயனடைந்து வருகின்றனர் . இதே கல்வித்திட்டத்தின் கீழ் பள்ளி களில் 890 குழந்தைகள் பயன டைந்து வருகின்றனர் . முதலமைச் சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் அடை யாள அட்டை மற்றும் செயற்கை கால் , சக்கர நாற்காலி , கால்தாங்கி உள்ளிட்ட பல்வேறு உதவி உபகர ணங்கள் பெற்று பயனடைய ஏது வாக மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 15 வாட்டார வள மைங்களில் 01.03.2022 முதல் 19.03.2022 வரையில் இலவச மதிப்பீட்டு  மருத்துவ முகாம் நடத்தப்படுகின் றது. இந்த முகாம்களின் மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் கொண்ட பள்ளி மாணவ / மாணவியர்கள் பயன்பெறு வர் தெரிவித்தார் .  இந்த நிகழ்ச்சியில் , மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஆர். சுவாமிநாதன் அவர்கள் , மாற்றுத்திற னாளிகள் நல அலுவலர் இரா.இரவிச்சந்திரன் அவர்கள் அரசு அலு வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.